ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கி ணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரி வால் தில்லி சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடி தம் எழுதியுள்ளார்.
அக்கடிதத் தில்,”தில்லியில் கடந்த 6 மாதங்களில், 600க்கும் மேற்பட்ட பள்ளிகள், 100க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் மற்றும் விமான நிலையங்க ளுக்கு வெடிகுண்டு மிரட்டல் செய்தி வந்துள்ளது. இந்த மிரட்டல் சம்பவங்கள் தொடர்பாக ஏன் இதுவரை குற்றவாளி களை கைது செய்யவில்லை?. பள்ளி கள் காலியாகி மாணவர்களை வீட்டுக்கு அனுப்பும் போது குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோரைப் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? தில்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்கள் அனை த்து இடங்களிலும் செயல்படுகின்றன. போதைப்பொருள் மாபியா கும்பல் தில்லி முழுவதும் பரவி வருகிறது. மொபைல் போன் மற்றும் தங்கச் செயின் பறிப்பு சம்பவங்களால் மக்கள் துன்புறுத்தப் படுகிறார்கள். அமித் ஷா அவர்களே உங்க ளது கண்காணிப்பின் கீழ் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ள நாட்டின் தலைநகரம், பலாத்கார தலைநகர், குண்டர்களின் தலைநகர், போதைப்பொருள் தலை நகர் என்று அழைக்கப்படுவது மிகவும் வெட்கக்கேடானது” என கூறப் பட்டுள்ளது.