headlines

img

ஒடிசாவில் அதிகரித்து வரும் பசு குண்டர்களின் வன்முறை

ஒடிசாவில் அதிகரித்து வரும்  பசு குண்டர்களின் வன்முறை

ஒடிசா மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் சிறுபான்மை மற்றும் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அம்மாநி லத்தின் கஞ்சம் மாவட்டத்தில் பசு கடத்தியதாக பொய்யான குற்றச்சாட்டில் பட்டியலினத்தைச் சேர்ந்த இருவர் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்ப வம் அதிர்ச்சியளிக்கிறது.   தாராகோட் தொகு திக்கு உட்பட்ட கரிகும்மா கிராமத்தில் கடந்த ஞாயி ற்றுக்கிழமை பட்டப்பகலில் இந்தச் சம்பவம் நடந் துள்ளது. இந்த அட்டூழியத்தில் தொடர்புடைய தாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை அறிக்கையின்படி பாதிக்கப் பட்டவர்களான சிங்கிப்பூரைச் சேர்ந்த புலு நாயக் (52), பாபுல் நாயக் (43) ஆகியோர் ஹரிபூரிலிருந்து ஒரு குடும்ப திருமண விழாவிற்காக வரதட்சணை யாக ஒரு பசுவையும் இரண்டு கன்றுகளையும் வாங்கி, டெம்போ ரிக்சாவில் தங்கள் கிராமத்தி ற்கு ஏற்றிச் சென்றபோது, பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் குண்டர்கள் கும்பல் ஒன்று அவர்க ளை வழிமறித்து தாக்கியுள்ளது.

சட்டவிரோதமாக பசுக்களை கொண்டு சென்ற தாக குற்றம் சாட்டி, அவர்களின் மொபைல் போன் கள் மற்றும் பணத்தை அந்த கும்பல் பறித்துக் கொண்டது. விலங்குகளை விடுவிக்க ரூ.30,000 கொடுக்கவேண்டும் என்று அவர்கள் பேரம் பேசியதில் இருந்தே இவர்களுக்கு பசுக்கள் மீது அக்கறை இல்லை என்பது தெரிகிறது.

அவர்கள் இருவரும் பணம் தரமறுத்ததால், அந்த கும்பல் அவர்களின் கைகால்களைக் கட்டி கொடூரமாகத் தாக்கியுள்ளது. அவர்களை உள்ளூர் சலூனுக்கு அழைத்துச் சென்று தலையை பாதி மொட்டையடித்து, பின்னர் ஜஹாதா கிராமத்திற்கு கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் தூரம் ஊர்ந்து செல்லுமாறு கட்டா யப்படுத்தியது. அங்கு அவர்களை மாடுபோல் புற்களை தின்ன வைத்து, சாக்கடை நீரை குடிக்கு மாறு கட்டாயப்படுத்தி கொடுமைப்படுத்தி யுள்ளது.

இந்தச் சம்பவம் பட்டியலின மக்களிடத்தில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத் தில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் இது போன்ற தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால் அதைக் கண்டித்து தலித் மகாசபா தலைவர்கள்  ஆர்ப்பாட்டமும் நடத்தியுள்ளனர். மாநிலத்தின் முதல்வர் ஒரு பழங்குடியினத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவரால் பட்டியலின மக்களை பாதுகாக்க முடியவில்லை. 

“சாதி இனி ஒரு பிரச்சனை அல்ல” என்று கூறுபவர்களுக்கு இந்த சம்பவம் ஒரு கண்ணாடி.  தலித்துகளின் கண்ணியத்தை மிதிக்கும் ஒவ் வொரு சம்பவமும் டாக்டர் அம்பேத்கர் உரு வாக்கிய அரசியலமைப்பின் மீதான தாக்குதலா கவே பார்க்கவேண்டும்”. பாஜக ஆளும் மாநிலங் களில் இதுபோன்ற சம்பவங்கள் சர்வ சாதாரண மாகி வருகின்றன. ஏனெனில் அவர்களின் அரசி யல் வெறுப்பு படிநிலையின் அடிப்படையில் கட்ட மைக்கப்பட்டுள்ளது. பட்டியலின, பழங்குடி மக்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான அட்டூழியங்கள், குறிப்பாக ஒடிசாவில், கவலையளிக்கும் வகை யில் அதிகரித்துள்ளன. நாடு அரசியலமைப்பின் படி இயங்குவது குறைந்து மனுஸ்மிருதி அடிப்படையில் இயங்குவது கற்காலத்தை நோக்கிச் செல்வதற்கு சமம்.