நாடாளுமன்ற மக்களவை யில் கடந்த வாரம் புத னன்று வண்ணப் புகைக் குப்பிகளை வீசி அத்துமீறிய விவ காரம் தொடர்பாக பெண் உட்பட 6 பேரை தில்லி போலீசார் கைது செய்துள்ள நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கக்கோரி மக்களவை மற்றும் மாநிலங்களவையில் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பாதுகாப்பு தோல்வியை மறைக்கவும், நாடா ளுமன்றத்தில் விளக்கம் அளிக்கா மல் தப்பிப்பதற்காகவும் அவை யை அமைதியின்மை ஆக்கியதாக கூறி 141 எதிர்க்கட்சி எம்பிக்களை இடைநீக்கம் செய்தது ஒன்றிய மோடி அரசு.
இந்த எதேச்சதிகாரத்தை கண் டித்து செவ்வாயன்று இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பிக்கள் நாடாளு மன்ற வாயிலில் உள்ள படிக்கட்டில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி தன்னை போல “மிமிக்ரி” செய்த தாகவும், இதனை ஆதரித்து காங்கி ரஸ் எம்பி ராகுல் காந்தி வீடியோ எடுத்ததாகவும் துணை குடியரசுத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான ஜகதீப் தன்கர் குற் றம்சாட்டினார். இதனைத் தொட ர்ந்து ஜகதீப் தன்கரை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வேதனையை வெளிப்படுத்தியதாக கூறப்பட் டது. தொடர்ந்து, குடியரசுத் தலை வர் திரவுபதி முர்மு “மிமிக்ரி” சம்பவம் குறித்து தனது அதிருப்தி யை பதிவு செய்துள்ளார். ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “மிமிக்ரி சம்பவத்திற்கு “இந்தியா கூட்டணி” மன்னிப்பு கேட்க வேண் டும்” எனக் கூறியுள்ளார்.
திசை திருப்பும் பாஜக
நாடாளுமன்ற பாதுகாப்பு தோல்வி மற்றும் 141 எதிர்க்கட்சி எம்பிக்கள் இடைநீக்க விவகா ரத்தை திசை திருப்பும் நோக்கில் கல்யாண் பானர்ஜியின் “மிமிக்ரி” விவகாரத்தை கையிலெடுத்துள் ளது பாஜக. “மிமிக்ரி விவகாரத்தை பாஜக வேண்டுமென்றே சர்ச்சைக் குள்ளாக்குகிறது. 141 எம்பி-க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் சூழ்ச்சி இது” என காங்கி ரஸ் பொதுச்செயலாளரும், இடை நீக்கம் செய்யப்பட்ட எம்பியுமான ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரி வித்துள்ளார்.
மோடி “மிமிக்ரி” செய்யவில்லையா?
இந்நிலையில், “மிமிக்ரி” விவ காரம் தொடர்பாக செய்தியாளர் களிடம் பேசிய கல்யாண் பானர்ஜி,“நான் எவரையும் புண்படுத்தும் நோக்கத்தில் செயல் படவில்லை. நான் ஜகதீப் தன்கர் அவர்களை மிகவும் மதிக்கிறேன். அவர் ஏன் இதைத் தனிப்பட்ட வகை யில் எடுத்துக்கொள்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை.
பிரதமர் மோடி கூட 2014 -2019-க்கு இடையில் மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர்களை “மிமிக்ரி” செய்தார். அவர் அவ்வாறு செய் ததை எல்லோரும் சீரியஸாக எடுக்காமல், நகைச்சுவையாகவே எடுத்துக் கொண்டனர். இப்போது என் விஷயத்தில் அவர்கள் சீரிய ஸாக எடுத்துக் கொண்டால், அதற்கு நான் பொறுப்பல்ல” எனக் கூறி யுள்ளார்.
ராகுல் காந்தியை “பப்பு” என அழைத்த பொழுது பாஜக சிரித்தது
கடந்த 2018இல் தேசிய ஜன நாயக கூட்டணி அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் பொழுது நாடாளுமன்ற மக்கள வையில் பிரதமர் மோடி ராகுல் காந்தி எம்பியை “பப்பு (குழந்தைத் தனமான)” என சைகை மூலம் “மிமிக்ரி” செய்து கிண்டலடித்த னர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் மோடி கிண்டல் செய்ததை ஆதரித்து பாஜக அமைச்சர்கள், எம்பிக்கள் சிரித்தனர். ராகுல் காந்தி கூட, “நீங்கள் என்னை வெறுக்கிறீர் கள். அதனால் என்னை “பப்பு” என்று அழைக்கிறீர்கள் மோடி. ஆனால் நான் உங்களை வெறுக்க வில்லை” என பெருந்தன்மை யாக பேசினார். ராகுல் காந்தியை “மிமிக்ரி” செய்த விவகாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி யினர் கண்டுகொள்ளவில்லை. ஆனால் தற்பொழுது திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி “மிமிக்ரி” செய்ததாக கூறி சாதாரண செயலுக்குக் கூட பிரதமர் வேதனை தெரிவிப்பதும், பாஜக அமைச்சர்கள், தலை வர்கள் கொந்தளித்து அறிக்கை விடுவதும் என எதிர்க்கட்சி எம்பிக் களின் இடைநீக்க பிரச்சனையை திசை திருப்ப தீவிரமாக செய லாற்றி வருகின்றனர்.