india

img

உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆர்.மகாதேவன் பதவியேற்பு!

உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆர்.மகாதேவன் இன்று பதவியேற்றுக்கொண்டார்.
கடந்த ஜூலை 11ஆம் தேதியன்று சென்னை உயர்நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதியாக இருந்த ஆர்.மகாதேவன் மற்றும் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.கோடீஸ்வர் சிங் ஆகியோரின் பெயர்களை உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது. இதனை தொடர்ந்து கடந்த ஜூலை 16-ஆம் இரு நீதிபதிகளையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் கோடீஸ்வர் சிங் ஆகியோர் இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர். இரு நீதிபதிகளுக்கும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 34 ஆக உள்ளது.