“இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜார் கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் (ஜேஎம்எம்) கட்சித் தலை வரும், ஜார்க்கண்ட் முதல்வரு மான ஹேமந்த் சோரனுக்கு சட்ட விரோத பணப் பரிமாற்றம் மற்றும் நிலக்கரி சுரங்க ஊழலில் தொடர் புள்ளதாக கூறி அமலாக்கத்துறை 10 முறை சம்மன் அனுப்பி வந்தது.
ராஜினாமா
10-ஆவது சம்மன் தொடர்பாக புதனன்று ஜார்க்கண்ட் தலை நகர் ராஞ்சியில் உள்ள அம லாக்கத்துறை அலுவலகத்தில் சுமார் 10 மணிநேர விசாரணைக்கு பின் வழக்கின் 15-ஆவது நபராக ஹேமந்த் சோரன் இரவு 10:30 மணி அளவில் கைது செய்யப்பட்டார். தான் கைது செய்யப்படுவதை முன்பே தெரிந்துகொண்ட ஹேமந்த் சோரன் தனது கட்சி எம்எல்ஏ-க்கள் மற்றும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் எம்எல்ஏ-க்களுடன் புதனன்று இரவு 9 மணி யளவில் ஆளுநர் மாளிகைக்கு சென்று, ஆளுநர் சி.பி.ராதா கிருஷ்ணனிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார்.
ராஜினாமாவை உடனடியாக ஆளுநர் ஏற்றுக்கொண்ட நிலை யில், புதிய முதல்வராக தேர்ந்தெ டுக்கப்பட்ட ஜார்க்கண்ட் மாநில பட்டியல் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சரான சம்பாய் சோரன் தனக்கு 47 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும், ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனி டம் புதனன்று இரவே கடிதம் கொடுத்தார்.
ஆளுநரை சந்தித்த சம்பாய் சோரன்
ஆளுநர் அழைப்பு விடுக்காத தால் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்ட சம்பாய் சோரன் வியாழனன்று ஆளுநரை சந்திக்க நேரம் கோரினர். ஆளுநர் மளிகை மாலை 5:30 மணிக்கு வருமாறு அழைப்பு விடுத்தது. சம்பாய் சோரன் மற்றும் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் ஆளுநரிடம் விரைவில் புதிய ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். கோரிக்கை தொடர்பாக விரைவில் முடிவெ டுப்பதாக ஆளுநர் சி.பி.ராதா கிருஷ்ணன் உறுதியளித்ததாக சம்பாய் சோரன் தகவல் தெரி வித்துள்ளார்.
சர்வாதிகாரத்தை எதிர்த்து போரிட ஹேமந்த் சோரன் அழைப்பு
அமலாக்கத்துறை கைது செய்யப் படுவதற்கு முன்பு ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் தனது வீட்டில் இருந்து வீடியோ வெளியிட்டார்.அதில், “எந்த ஆதாரமும் இல்லாமல் அம லாக்கத்துறை தன் மீது குற்றச் சாட்டை வைத்து, தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனே தில்லி வீட் டில் சோதனை நடத்தியுள்ளது. அம லாக்கத்துறையின் இந்த செயலால் துவண்டு விடமாட்டேன். புதிய யுத் தத்தை முன்னெடுக்க வேண்டிய கட்டத்தில் இருப்பதால், ஏழைகள், பழங்குடியினர் மற்றும் அப்பாவி மக்களை ஒடுக்கும் சர்வாதிகா ரத்தை எதிர்த்து போராடுவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண் டும். என் மீதான வழக்கில் உண்மை நிச்சயம் வெளிவரும்” என அவர் சூளுரைத்துள்ளார். ஹேமந்த் சோர னின் வீடியோ சமூக வலைத்தளங்க ளில் டாப் ஆர்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குடியரசுத் தலைவர் ஆட்சி?
ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை 7-ஆவது சம்மன் அனுப்பிய காலத்தில் இருந்தே ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவர்கள், மாநி லத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைய உள்ளதாக அடிக்கடி கொக்கரித்து வருகின்ற னர். தற்பொழுது ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஜார்க்கண்ட் மாநில பாஜக முன்னாள் தலைவர் சர்யு ராய், “ஹேமந்த் சோரனுக்குப் பிறகு ஜார்க்கண்டில் முதல்வர் இல்லை, அரசாங்கமில்லை. ஹேமந்த் சோரன் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். மாநி லத்தில் அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டுள் ளது. மாற்று அரசு அமையும் வரை குடியரசுத் தலைவர் அமைவதே நல்லது” எனக் கூறினார். இவரது கூற்றைப் போலவே குடியரசுத் தலை வர் ஆட்சி அமைவதற்காக ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அடுத்த அரசை அமைக்க அழைப்பதில் தாமதம் செய்து வரு கிறாரா என்ற மேலும் ஒரு சந்தேகமும் கிளம்பி யுள்ளது.
நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்: 43 எம்எல்ஏக்கள்
பாஜகவின் குதிரை பேரத்தை தடுக்க ஜேஎம்எம் - காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ-க்கள் 43 பேர் ராஞ்சியில் உள்ள சர்க்யூட் ஹவுஸில் தங்கியுள்ளனர். 43 எம்எல்ஏக் களும் ஒற்றுமையாக சம்பாய் சோரனின் ஆட்சிக்கு ஆத ரவு அளிப்போம் என உறுதியளிக்கும் வீடியோவை ஜேஎம்எம் - காங்கிரஸ் கட்சிகள் வெளியிட்டன. ஆளுநர் விரைவில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கவில்லை என்றால், காங்கிரஸ் ஆளும் தெலுங்கானா மாநில தலை நகர் ஹைதராபாத்தில் உள்ள சர்வதேச கட்டமைப்பு உள்ள ரிசார்ட்க்கு 43 எம்எல்ஏ-க்களையும் அழைத்து செல்லப்படும் நடவடிக்கை எடுப்போம் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் சட்டமன்றத்தின் பலம்
மொத்தம் - 81
பெரும்பான்மை - 41
“இந்தியா” கூட்டணி
ஜேஎம்எம் - 29 + ஹேமந்த் = 30
காங்கிரஸ் - 17
சிபிஐ (எம்-எல்) - 1
ஆர்ஜேடி - 1
மொத்தம் - 48
தேசிய ஜனநாயக கூட்டணி
பாஜக - 26
ஏஜே எஸ்யு - 3
என்சிபி (அஜித்) - 1
சுயேச்சை - 2
மொத்தம் - 32