india

img

இடைநீக்கம் செய்யக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள்தான் கோரிக்கை விடுத்தனராம்!

நாடாளுமன்ற அத்துமீறல் தொடர்பாக ஒன்றிய அமைச்சர் அமித் ஷா விளக் கம் அளிக்க வேண்டும் என கோரி க்கை விடுத்ததற்காக மக்களவை, மாநி லங்களவை என இரு அவைகளிலும் “இந்தியா” கூட்டணியைச் சேர்ந்த 146 எதிர்க்கட்சி எம்பிக்களை ஒன்றிய மோடி அரசு இடைநீக்கம் செய்தது.

நாடாளுமன்ற வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் நிகழ்ந்துள்ள இந்த இடைநீக்க சம்ப வம் தொடர்பாக ஒன்றிய நாடாளு மன்ற விவகாரங்கள் துறை அமைச் சர் பிரகலாத் ஜோஷி சர்ச்சைக் குரிய வகையில் விளக்கம் அளித்து திசைதிருப்பும் வேலையில் இறங்கி யுள்ளார். அதில், “நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்ப வில்லை. அவையை அமைதியாக நடத்த பலமுறை கோரிக்கை விடுத் தோம். ஆனால் அவர்கள் பதாகை களை ஏந்தி ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் சிலர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இவ்வாறு சிலர் இடைநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து பல எம்பிக்கள் தங்களையும் இடைநீக்கம் செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர். ஒழுங்கீனமாக நடந்து கொண்டவர்கள் மீது மட்டுமே நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று  மக்களவை மேலாளர்கள் எடுத்துச் சொன்னபோது, தாங்களும் ஒழுங்கீன மாகத்தான் நடந்து கொண்டதாகவும் எனவே தங்களையும் இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்” என பிரகலாத் ஜோஷி தெரிவித்தார். 

இடைநீக்க நடவடிக்கையை கண்டித்து “இந்தியா” கூட்டணி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தியும், நாங்கள் இருக்கையில் அமர்ந்து இருந்த பொழுதும் வேண்டும் என்றே மக்களவை சபாநாயகர் இடை நீக்கம் செய்ததாகவும் சமாஜ்வாதி  எம்பி டிம்பிள் யாதவ் உள்ளிட்டவர்கள் கூறிய நிலையில், இடைநீக்கம் செய்யக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் தான் கோரிக்கை விடுத்ததாகக் கூறி  சர்ச்சையை கிளப்பியுள்ளார் நாடாளு மன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி.