india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மதுபான கலால் கொள்கை வழக்கில் தொடர்பு டையதாகக் கூறி 8-ஆவது முறையாக சம்மன்  அனுப்பியுள்ளது அமலாக்கத்துறை. சம்மனில்  மார்ச் 4 அன்று கெஜ்ரிவால் தில்லி அமலாக் கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு அம லாக்கத்துறை அனுப்பிய 7 சம்மன்களையும் சட்ட விரோதமானது எனக் கூறி கெஜ்ரிவால் புறக்க ணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகா மாநிலம் யஷ்வந்த்பூர் தொகுதி பாஜக  எம்எல்ஏ சோமசேகர், காங்கிரஸ் மாநிலங்க ளவை வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை பாஜக வட்டா ரங்களும் உறுதி செய்துள்ளன.

ராகுல் காந்தியின் “இந்திய ஒற்றுமைக்கான நீதி யாத்திரை” மார்ச் 2-ஆம் தேதி மத்தியப்  பிரதேச மாநிலத்திற்குள் நுழைய உள்ளதாக, அம்மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் ராஜீவ் சிங் தகவல் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் இன்சோலி அருகே  பிட்காரி கிராமத்தில் உள்ள டயர் தொழிற் சாலையில், செவ்வாயன்று அதிகாலை கொதி கலன் வெடித்து விபத்துக்குள்ளானதில் 2 ஊழி யர்கள் உயிரிழந்த நிலையில், மூன்று பேர் படு காயத்துடன் மீட்கப்பட்டனர். 

தோல்வி பயத்தால் பாஜக ஆள்பிடி வேலை யை தீவிரமாகச் செயல்படுத்தி வரும்  நிலையில், குஜராத் மாநிலத்தின் மூத்த காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான நரண்  ரத்வா தனது மகனுடன் செவ்வாயன்று பாஜகவில் இணைந்தார். நரண் ரத்வா முன்னாள் ஒன்றிய அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூ ரின் நிவாரண முகாம்களில் வசிப்போருக்கு  ரேசன் பொருள்கள் வழங்கப்படுவது நிறுத்தப் பட்டுள்ளது. இது குறித்து ஐடிஎல்எப் அமைப்பு ஒன்றிய அரசிடம் முறையிட்டுள்ளது.

ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய் சங்கரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை  அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல் தெரிவித்துள்ளார்.

பாட்னா
தேஜஸ்வி யாத்திரையால் நடுங்கும் பாஜக - நிதிஷ்
ஆர்ஜேடி எம்எல்ஏ வீட்டில்
அமலாக்கத்துறை

ராகுல்காந்தி யாத்திரையைப் போன்று “இந்தியா” கூட்டணி யில் அங்கம் வகிக்கும் ராஷ்ட்  ரிய ஜனதாதள (ஆர்ஜேடி) தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி “மக்கள் நம்பிக்கை” என்ற பெயரில் பீகார் மாநிலம் முழுவதும் யாத்  திரை மேற்கொண்டு வருகிறார். 

இந்த யாத்திரையில் “இந்தியா” கூட்ட ணிக் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பி னரும் கலந்து கொள்வதால், ஒவ்வொரு  இடங்களிலும் மக்கள் வெள்ளத்தி லேயே யாத்திரை நகர்ந்து செல்கிறது. தேஜஸ்வி யாத்திரையால் பாஜக - ஐக்கிய ஜனதாதள கூட்டணி பதற்றம டைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், செவ்வாயன்று  ஆர்ஜேடி எம்எல்ஏ வீட்டிற்கு அமலாக்கத்  துறையை ஏவிவிட்டுள்ளது மோடி அரசு.

சந்தேஷ் தொகுதி ஆர்ஜேடி எம்எல்ஏ  கிரண் தேவி மற்றும் அவரது கணவரும்,  முன்னாள் எம்எல்ஏவுமான அருண் யாதவ்  ஆகிய இருவரும் வருமானத்துக்கு அதி கமாக சொத்து சேர்த்ததாகக் கூறி, கிரண்  தேவி வீடு மற்றும் அவருக்கு நெருக்க மானவர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் செவ்வாயன்று அதி காலை முதல் சோதனை மேற்கொண்டனர்.

போபால்
‘கோடி மீடியா’
கமல்நாத் கண்டனம்

மூத்த காங்கிரஸ் தலைவரும், மத்தி யப்பிரதேச முன்னாள் முதல்வரு மான கமல்நாத், கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜக வில் இணையவுள்ளதாக “கோடி மீடியா”  ஊடகங்கள் தொடர்ச்சியாக செய்தி வெளி யிட்டு சர்ச்சையைக் கிளப்பின.

கிட்டத்தட்ட ஊடகங்களே கமல்நாத்,  நகுல்நாத் பாஜகவில் இணைந்து விட்ட தாக அறிவித்த நிலையில், இதற்கு மறுப்பு  தெரிவித்து, பாஜகவிற்கு ஆதரவாக ஊடகங்கள் செயல்படுகின்றன என  கமல்நாத் குற்றச்சாட்டியுள்ளார். சிந்த் வாராவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கமல்நாத் கூறுகையில்,”நான் பாஜகவில் இணைவதாக ஊடகங்கள்  தான் சொல்கிறது. வேறு யாரும் சொல்ல வில்லை. ஆனால் இதுகுறித்து ஒருமுறை  கூட ஊடகங்கள் என்னிடம் கேள்வி எழுப்  பாமல், நான் பாஜகவில் இணையவுள் ளது போன்று அறிகுறியை கிளப்பி, ஊட கங்கள் செய்தியாக ஓட்டிக்கொண்டே இருந்தது. இதன்மூலம் பாஜகவிற்கு ஆத ரவாக ஊடகங்கள் செயல்படுவது உறுதி யாகி விட்டது” என அவர் கூறினார்.