india

img

விண்ணில் பாய்ந்தது இன்சாட்-3 டிஎஸ் செயற்கைக்கோள்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ வடிவமைத்த இன்சாட்-3 டிஎஸ் எனும் அதிநவீன செயற்கைக்கோளை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-ஆவது ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி-எப்14 ராக்கெட் மூலம் சனியன்று மாலை 5.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இந்த இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதை அடுத்து, விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் வாழ்த்துகளை தெரிவித்தார்.