இந்தியாவில் தேர்தல் நன்ா கொடை பத்திரங்கள் அரசி யல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என கூறி கடந்த பிப்ரவரி 15 அன்று உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
இந்நிலையில், ஏப்ரல் 11 அன்று அதாவது தீர்ப்பு வெளியாவதற்கு 3 நாள்களுக்கு முன்பு ஒன்றிய பாஜக அரசு நிதி அமைச்சகம் மூலம் தலா ரூ.1 கோடி மதிப்புள்ள 10 ஆயிரம் தேர்தல் பத்திரங்களை அச்சிடு வதற்கு “செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (எஸ்பிஎம்சிஐ)” அமைப் புக்கு ஒப்புதல் அளித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளி யான 13 நாள்களுக்குப் பிறகு அதா வது கடந்த பிப்ரவரி 28 அன்று புதி தாக பத்திரங்களை அச்சிடுவதை நிறுத்துமாறு ஒன்றிய நிதி அமைச்ச கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எஸ்பிஎம்சிஐஎல் ஏற்கெனவே 8,350 பத்திரங்களை தயாரித்து எஸ்பிஐ வங்கிக்கு அனுப்பியதும், மீதமுள்ள 1,650 தேர்தல் பத்தி ரங்களை அச்சிடுவதை உடனடி யாக நிறுத்துமாறு எஸ்பிஎம்சிஐக்கு கடிதம் அனுப்பப்பட்டதும் தெரிய வந்துள்ளது.