திம்பு,செப்.27- இந்திய ராணுவத்துக்குச் சொந்த மான ஹெலிகாப்டர் அண்டை நாடான பூடானில் விழுந்து விபத்துக்குள்ளான தில் 2 பேர் பலியாகினர். இந்தியா மற்றும் பூடான் இடையே ராணுவ பயிற்சிகளை மேற்கொள்வ தற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள் ளது. அதன்படி இந்திய ராணு வத்துக்குச் சொந்தமான ஹெலி காப்டர் ஒன்று பூடானில் வெள்ளி யன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது பனிமூட்டத்தினால் ஏற்பட்ட மோசமான வானிலையால் ஹெலிகாப்டர் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பயிற்சி அளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய அதிகாரி ஒருவரும், பயிற்சி பெறுவதற்காக விமானத்திலிருந்த பூடான் வீரர் ஒருவரும் பலியானதாக கூறப்படுகிறது.இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.