சென்னை,ஜன.12- சென்னைக்கு அருகே வங்கக் கடல் பரப்பில் இந்திய கடலோர காவல் படை மற்றும் ஜப்பான் கடலோர காவல் படை இணைந்து கூட்டு பயிற்சி யில் ஈடுபட்டது. இந்தியா-ஜப்பான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே கடந்த 2006 இல் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த கூட்டு பயிற்சி நடைபெற்றது. நிர்வாக ரீதியிலான மேம்படுத்துதல், தொழில் முறை ரீதியிலான கொள்கைகள் பரிமாற்றங் கள், தொழில்நுட்ப பரிமாற்றங்கள் மற்றும் கூட்டு பயிற்சி ஆகியவற்றிற் காக வருடா வருடம் நடத்தப் பட்டு வருகிறது.
இந்த கூட்டு பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பார்க்கும் போது, பயிற்சி பரிமாற்றங்கள், குறுகிய கால பயிற்சி பட்டறைகள், கருத்தரங்குகள், தொடர்பு கள் மேம்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு இரு நாடுகள் இடையேயான கடலோர காவல் படையினர் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக கூட்டு பயிற்சியில் பங்கேற்க ஜப்பான் கப்பல் ‘யாஷிமா சென்னை துறைமுகம் வந்தடைந்துள்ளது. இந்திய கடலோர காவல் படையின் 10 கப்பல்கள், ஜப்பானின் யாஷிமா கப்பல் கூட்டு பயிற் சியில் பங்கேற்றுள்ளது. இந்த கூட்டு பயிற்சியில், படகில் சிக்கியுள்ளவர்களை மீட்பது, மீட்பு படகுகள் எவ்வாறு இயக்கப்படு கின்றன, அதன் செயல்முறை விளக்கங்கள், நடுக்கடலில் படகுகள் தீ பிடித்தால் அதை எவ்வாறு அழைக்கப்படு கின்றன, விபத்தில் இருந்து எவ்வாறு பயணிகள் மீட்க படுகின்றனர்,
கடற்பரப்பில் எண்ணை டிமங்கள் எவ்வாறு அகற்றப்படுகின்றன? என்பது குறித்த விரிவான செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. குறிப்பாக ஹெலிகாப்டர் விமானங்கள் மூலம் விபத்தில் சிக்கியவர்கள் எவ்வாறு மீட்கப்படுகின்றனர் என்பது குறித்த விரிவான செயல்முறை விளக்கத்தை இந்திய கடலோர காவல் படை மற்றும் ஜப்பான் கடலோர காவல் படை இணைந்து கூட்டு பயிற்சி யின் மூலம் தத்ரூபமாக விளக்கி காட்டியது.