சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு 71ஆவது உலக அழகிப் போட்டியை இந்தியா தலைமை யேற்று நடத்த உள்ளது. தில்லியில் உள்ள பாரத் மண்டபம் மற்றும் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்டு வளாகத்தில் பிப்ரவரி 18-ஆம் தேதி முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை உலக அழகிப் போட்டி நடைபெறவிருக்கிறது. உலகம் முழு வதும் பலராலும் கவனிக்கப்படும் இந்த உலக அழகிப் போட்டியை இந்தியா இதற்கு முன்பு கடந்த 1996-ஆம் ஆண்டு பெங்களூரில் நடத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜார்க்கண்ட் மாநிலம் கிழக்கு சிங்பூமில் உள்ள கம்ஹாரியா ரயில் நிலையம் அருகே வியாழனன்று இரவு 7 மணியளவில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற 4 பேர் மீது அந்த வழியாக வந்த கலிங்கா உத்கல் எக்ஸ்பிரஸ் மோதியது. இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
ரயில்வே வேலைக்கு லஞ்சம் பெற்றதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து விசாரிக்க லாலு பிரசாத் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவரும், பாலியல் குற்றவாளியுமான குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு மீண்டும் 50 நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கும் வேளையில் பாஜக தீவிரமாக களமிறங்கியுள்ளது. விஜப்பூர் காங்கிரஸ் எம்எல்ஏ-வான சி.ஜே.சௌதா தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அவர் விரைவில் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் குடியரசு தின விழாவை முன்னிட்டு தில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஜனவரி 19 முதல் ஜனவரி 26 வரை குறிப்பிட்ட நேரத்தில் விமானங்களுக்குத் தரை யிறங்க மற்றும் புறப்பட கட்டுப்பாடு விதிக்கப் பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதி யான அனேகலில் பள்ளிக்கு கட்டப்பட்டு வந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், 13 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர்.
ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
கொல்கத்தா
அரசு பங்களாவை காலி செய்தார் மஹுவா மொய்த்ரா
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணா தொகுதியின் எம்.பி., யுமான மஹுவா மொய்த்ரா நாடாளு மன்றத்தில் அதானிக்கு எதிராக கேள்வி யெழுப்ப லஞ்சம் பெற்றதாக டிசம்பர் 8-ஆம் தேதி மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்யப்பட்டார். எம்.பி., பதவியில் இருந்து மஹுவா நீக்கப் பட்டதைத் தொடர்ந்து அவருக்கு ஒதுக் கப்பட்ட அரசு பங்களாவை ஜனவரி 7-ஆம் தேதிக்குள் காலி செய்யுமாறு நாடாளு மன்ற உறுப்பினர்களுக்கு அரசு பங்களா வை ஒதுக்கீடு செய்யும் அரசு எஸ்டேட் இயக்குநரகம் கேட்டுக்கொண்டது. இத னை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத் தில் மஹுவா மொய்த்ரா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலை யில், வெள்ளியன்று அரசு பங்களாவை காலி செய்தார் மஹுவா மொய்த்ரா.
சபரிமலை கோவிலில் பெண்கள் நிற்பதைப் போன்ற வீடியோ போலியானது
சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதானத்தின் 18 படிகள் அருகே இரண்டு இளம் பெண்கள் இருமுடி கட்டியது போன்ற வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலானது. இதுதொடர்பாக பத்தனம்திட்டா மாவட்ட சைபர் பிரிவு போலீசார் தானாக முன் வந்து வழக்குப் பதிவுசெய்து மேற் கொண்ட விசாரணையில், ராஜேஷ் என்ற இளைஞரின் இன்ஸ் டாகிராம் பக்கத்தில் வியாழ னன்று மாலை 5 மணிக்கு போலி யாக சித்தரிக்கப்பட்ட வீடியோ முதன்முதலில் பகிரப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
மேலும் இரண்டு இளம் பெண்கள் இருமுடிகட்டியது போன்ற படங் களை சபரிமலை ஐயப்பன் கோவிலின் படிகளுக்கு அருகில் நிற்பது போன்று எடிட் செய்து சமூகவலைதளங்களில் அவர் பரப்பியது தெரிய வந்தது. இதை யடுத்து, மத உணர்வுகளை புண்படுத்துதல், வேண்டு மென்றே கலவரத்தை உருவாக்க முயன்றது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் ராஜேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள தாக பத்தனம்திட்டா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.