புதுதில்லி, டிச. 22 - பாஜக ஆட்சியாளர்களிட மிருந்து ஜனநாயகத்தைக் காப்பா ற்ற மக்கள் ஒன்றுபட வேண்டும் என்று ‘இந்தியா’ கூட்டணி தலைவர் கள் அறைகூவல் விடுத்துள்ளனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் போது 146 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப் பட்டதற்கு எதிராகவும், டிசம்பர் 13 அன்று நாடாளுமன்றத்தில் நடை பெற்ற பாதுகாப்பு மீறல் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா விரிவான அறிக்கை வெளியிடக் கோரியும் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் வெள்ளிக்கிழமையன்று நாடு தழுவிய அளவில் போராட்டங்களை நடத்தினர்.
இதனொரு பகுதியாக, தலை நகர் தில்லியிலும் ‘ஜனநாயகத்தைப் பாதுகாப்போம்’ (‘Save Democracy’) என்ற பதாகையின் கீழ் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது.
இதில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செய லாளர் சீத்தாராம் யெச்சூரி, சிபிஐ பொதுச் செயலாளர் து.ராஜா, திமுக எம்.பி. திருச்சி சிவா, ஆர்ஜேடி எம்.பி. மனோஜ் ஜா, ஜேஎம்எம் எம்.பி. மஹுவா மாஜி, திரிணாமுல் சார்பில் மவுசம் நூர், தேசிய மாநாட்டுக் கட்சி சார்பில் ஹஸ்னைன் மசூதி, ஆர்எஸ்பி சார்பில் என்.கே. பிரேம சந்திரன் மற்றும் ஹசன், காங்கிரஸ் தலைவர்கள் கே.சி.வேணு கோபால், கவுரவ் கோகோய், சுக்ஜிந்தர் சிங் ரந்தவா, முகமது அசாருதீன், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
யெச்சூரி கடும் சாடல்
இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேசுகை யில், “ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது. 146 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட் டது இதுவரை யாரும் கேள்விப் படாதது. அடுத்த முறை பாஜக வெற்றி பெற்றால் நாடாளுமன்றத் தையே துடைத்து விடுவார்கள். எனவே, தற்போது ஆட்சியில் இருப்பவர்களிடம் இருந்து ஜனநா யகத்தைக் காப்பாற்றுவது இப் போது மிக அவசியம், அதனால் தான் இன்று ‘இந்தியா’ அணி திரண்டுள்ளது. 146 எம்.பி. க்களை சஸ்பெண்ட் செய்ததால் ஜன நாயகத்தின் முதுகெலும்பு சிதைந்து விட்டது. அமிர்த காலம் வரும்; ஆனால் தற்போது அமிர்த கல சத்தில் விஷம் கலந்து தவறான வர்களின் கைகளில் சிக்கியுள்ளது. 2024 தேர்தலில் ஒற்றுமையாக போராடி நாட்டை காப்போம். நாடா ளுமன்றத்தில் நடந்த பாதுகாப்பு மீறல் சம்பவத்திற்கு பாஜக பொறுப் பேற்க வேண்டும்” என்றுகூறினார்.
நாடாளுமன்றத்தில் இருந்து 146 எம்.பி.க்களை வெளியேற்றி யதன் மூலம், 60 சதவிகித இந்தி யர்களின் குரலை அரசாங்கம் முடக்கியுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித் தார்.