india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பெங்களூரு
டி.கே.சிவகுமாருக்கும் வருமானவரித்துறை நோட்டீஸ்

காங்கிரஸ், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சிகளுக்கு நோட்  டீஸ் அனுப்பியது போல, காங்கிரஸ் மூத்த தலைவரும் கர்நாடக துணை முதல்வருமான டி.கே.சிவகுமா ருக்கும் வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நோட்டீஸில் குறிப்  பிட்டுள்ள அபராதத் தொகை குறித்த தக வல் குறிப்பிடப்படாத நிலையில், ஏற்க னவே முடிந்துபோன விவகாரத்துக்காக வருமான வரித்துறை தனக்கு நோட்டீஸ்  அனுப்பியுள்ளதாக டி.கே.சிவகுமார் குற்  றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர்  மேலும் கூறுகையில், “வருமானவரித்  துறை, சிபிஐ, அமலாக்கத்துறையை கொண்டு எதிர்க்கட்சிகளை முடக்க நினைக்கின்றனர். கர்நாடகத்தைச் சேர்ந்த  ஒன்றிய அமைச்சர் ஒருவரே 5 ஆண்டு காலம் வருமானவரி செலுத்தாமல் உள்  ளார்.ஆனால் தனக்கு முடிந்துபோன விவ காரத்துக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்  பட்டுள்ளது” என அவர் கூறினார்.

கேங்டாங்
தேர்தலை புறக்கணிக்கும் நாகாலாந்து மக்கள்

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்  றான நாகாலாந்தில் பாஜக கூட்  டணி ஆட்சி நடைபெற்று வரு கிறது. அங்கு ஒரே ஒரு மக்களவைத் தொகுதி உள்ள நிலையில், ஒரே கட்ட மாக ஏப்ரல் 19 அன்று வாக்குப்பதிவு நடை பெற உள்ளது. இந்நிலையில் தனி நிர்வா கம் அல்லது 6 மாவட்டங்கள் (கிழக்கு  பகுதி) உள்ளடக்கிய தனி மாநிலம் கோரிக்  கையை ஒன்றிய அரசு நிறைவேற்றும் வரை தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடு வோம் என கிழக்கு நாகாலாந்து மக்கள்  அமைப்பு (இஎன்பிஓ) அறிவித்துள்ளது. பழங்குடியினர் பெரும்பான்மையாக வசிக்கும் நாகாலாந்தின் கிழக்குப் பிராந்  தியத்தில் இஎன்பிஓ மிக முக்கிய அமைப்  பாக உள்ள நிலையில், அந்த அமைப்பின்  அறிவிப்பால் கிழக்கு நாகாலாந்து மக்கள்  மக்களவை தேர்தலை முழுவதுமாக புறக்  கணிப்பார்கள் என தகவல் வெளியாகி யுள்ளது.

மும்பை
பாஜக கூட்டணியில் மேலும் ஒரு கட்சி விலகல்

மக்களவைத் தேர்தலில் 400 இடங் களை கைப்பற்றுவோம் என பிர தமர் மோடி மற்றும் அமித் ஷா  அடிக்கடி கொக்க ரித்து வரும் நிலை யில், கூட்டணி கட்சி களுக்கு தொகுதி  பங்கீடு விவகாரத்தை கூட கையாள முடி யாமல் பாஜக கதி கலங்கி வருகிறது. தமிழ்நாட்டில் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம்,  பீகாரில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் பசு பதி பரஸின் ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி போன்ற கட்சிகள் தொகுதி பங்கீடு பிரச்  சனை காரணமாக பாஜகவை கழற்றி விட்டு ஓட்டம் பிடித்தன. இந்நிலையில், மகாராஷ்டிராவிலும் ஒரு கட்சி ஓட்டம் பிடித்துள்ளது.

ஒன்றிய சமூக நீதித்துறை அமைச்ச ரும், மகாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய  தலித் தலைவராகவும் கருதப்படுபவரு மான ராம்தாஸ் அத்வாலேவின் இந்திய  குடியரசு கட்சி ஷீரடி உட்பட 2 தொகுதியை  (மகாராஷ்டிராவில் ) கேட்டது. ஆனால்  பாஜக ஒரு தொகுதியை கூட ஒதுக்காத நிலையில், ராம்தாஸ் அத்வாலே பாஜக கூட்டணியை விட்டு விலகுவதாக முடி வெடுத்துள்ளதாகவும், விரைவில் அவ ரது இந்திய குடியரசு கட்சி “இந்தியா” கூட்டணியில் இணையவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுதில்லி
“இந்தியா” கூட்டணிக் கட்சிகள் இன்று போராட்டம்

“இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி ஒருங்கி ணைப்பாளரும், தில்லி முதல்  வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜேஎம்எம் கட்சித் தலைவரும், ஜார்க்கண்ட் முன்  னாள் முதல்வருமான ஹேமந்த் சோரனை  அமலாக்கத்துறை மூலம் மோடி அரசு  சிறையில் அடைத்துள்ளது. இந்நிலை யில், தேர்தலில் சுதந்திரமாக செயல்பட  முடியாத அளவிற்கு வருமானவரித்துறை மூலம் காங்கிரஸ் (ரூ.1,823 கோடி), இந்திய  கம்யூனிஸ்ட் கட்சி (ரூ.11 கோடி), திரிணா முல் காங்கிரஸ் கட்சிகளுக்கு (அபராதத் தொகை உறுதியாக தெரியவில்லை) மோடி அரசு அபராத நோட்டீஸ் அனுப்பி தனது பயத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தில்லி முதல்வர் அர விந்த் கெஜ்ரிவால் கைது மற்றும் எதிர்க்கட்சிகள் மீதான ஒன்றிய மோடி அரசின் மோசமான அடக்குமுறையை கண்டித்து தில்லி ராம்லீலா மைதா னத்தில் ஞாயிறன்று “இந்தியா” கூட்டணி  பிரம்மாண்ட போராட்ட பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.