புதுதில்லி, மார்ச் 4- 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாட்டில் 68 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் 3 லட்சத்து 32 ஆயிரம் பணி யாளர்கள் ஈடுபட உள்ள தாக தமிழகத் தலைமை தேர்தல் அதி காரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
“மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு இயந்திரங்கள் முழுவதுமாக ஆய்வு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. தேர்தல் தேதி அறிவித்த பின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொகுதி களுக்கு பாதுகாப்பாக அனுப்பப்படும். தேர்தல் அதிகாரிகள், உதவித் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டுள் ளது” என்று கூறியிருக்கும் அவர், செய்தி யாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு, “திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி யில் காலியானதாக இதுவரை எந்த ஒரு கடிதமும் வரவில்லை” என்றும் குறிப்பிட் டுள்ளார்.