புதுதில்லி,அக்.1- உயர்மட்ட 6 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் நிதின்கட்காரியிடம் தமிழக அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தியுள்ளார்.
ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ் சாலைப் பணிகள், இந்திய தேசிய நெடுஞ் சாலை ஆணையப் பணிகள் பல்வேறு நிலையில் உள்ளன. அத்தகைய பணி களில் உள்ள இடர்பாடுகளைக் களைந்து, பணிகளில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற நோக்கத்துடன், ஒன்றிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின்கட்காரி தலைமையில் புது தில்லியில் ஆய்வுக்கூட்டம் நடை பெற்றது. இதில் தமிழ்நாடு பொதுப் பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்றார்.
அமைச்சர் எ.வ.வேலு பேசுகை யில், ஒன்றிய அமைச்சர், சில திட்டங் களில் நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதால் திட்டங்கள் முடிக்கப்படுவதில் தாமதம் ஏற்படு கிறது என்று குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை பிரிவு மூலம் இந்திய அரசு பல திட்டங் களை செயல்படுத்தி வருகிறது.சில முக்கிய சாலைகள், அவற்றின் போக்கு வரத்து செறிவினைத் தாண்டி விட்டதால், மேம்பாடு தேவைப்படும் சில முக்கியமான தேசிய நெடுஞ் சாலைத் திட்டங்களைப் பரிசீலிக்க வேண்டும். பொதுமக்கள் இச்சாலை யில் பயணம் செய்வதால் கால தாமதமும், விபத்துக்களும் ஏற்படுவ தால், இந்த திட்டங்களுக்கு முன்னு ரிமை அடிப்படையில் அனுமதி வழங்க வேண்டும். கிளாம்பாக்கம் முதல் செட்டிபுண்ணியம் வரையிலான 8 வழிச்சாலையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாகன போக்குவரத்து உள் ளது. சென்னை நகரின் புறநகர்ப் பகுதியில் இந்த வழித்தடம் இருப்ப தால், விழாக்காலம், விடுமுறைகள், வார இறுதி நாட்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.
எனவே, முன்னுரிமை அடிப்படை யில், உயர்மட்ட 6 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
செங்கல்பட்டு முதல் உளுந்தூர் பேட்டை வரை உள்ள நான்கு வழித்தட மானது, தமிழ்நாட்டின் தென்மாவட்டங் களுடன் இணைக்கும் முக்கிய சாலையாகும். இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் எப்போதும் அதிகமாகவும், விபத்துக்களும் அதிகம் நடைபெறுகிறது. எனவே, முன்னுரிமை அடிப்படையில் 6 வழிச்சாலையாக மேம்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் பேசுகையில், கோயம்புத்தூர் புறவழிச்சாலை 26.20 கி.மீ. நீளமுடையது. நீலம்பூரிலிருந்து மதுக்கரை வரை, கேரளா மாநி லத்திற்கு கோயம்புத்தூருடன் ஒரு முக்கிய இணைப்பு சாலையாக உள்ளது. எனவே, இச்சாலையை 4/6 வழித்தட சாலைக்குப் போதிய நிலம் உள்ளதால், கோயம்புத்தூர் புற வழிச்சாலையின் 4/6 வழித்தட சாலை யை முன்னுரிமை அடிப்படையில் பணி மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டார்.