india

img

வக்பு மசோதா நிறைவேற்றப்பட்டால் நிதிஷ் குமார், சந்திரபாபு தான் முழுப் பொறுப்பு

புதுதில்லி வக்பு மசோதா நிறைவேற் றப்பட்டால் நிதிஷ் குமார், சந்திரபாபு தான் முழு பொறுப்பு என ஜமியத் தலைவர் மௌலானா அர்ஷத் மதானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“இந்தியா”கூட்டணி முன்னேற்றம்

இதுகுறித்து தில்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் “அரசியலமைப்பைக் காப்பாற்றுங்கள்” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அர்ஷத் மதானி மேலும் கூறுகை யில்,“கடந்த மக்களவை தேர்தலில் தங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந் தால், அனைத்து சிறுபான்மையின ரும் அவர்களது மதத்தை பின்பற்ற  சுதந்திரமாக இருப்பார்கள் என்று “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் கூறின. அதனால்தான் முஸ்லிம்கள் தங்கள் மதத்தை கடைப்பிடிக்க சுதந்திரம் அளிக்கும் கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று  நான் வலியுறுத்தினேன். அறிவித் தது போலவே நாடு முழுவதும் முஸ்லிம்கள்  “இந்தியா” கூட்ட ணிக்கு ஆதரவளித்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஆதர வின் ஒற்றுமை மூலம் “இந்தியா” கூட்டணி முன்னேற்றத்துடன் வெற்றி கண்டது. பாஜக தோற் கடிக்கப்பட்டது.

ஊன்றுகோல்கள் மூலம் நிற்கும் மோடி அரசு 

பாஜகவினரின் கொள்கை களை நாட்டு மக்கள் ஏற்கவில்லை. அதனால் தான் நாட்டு மக்கள் பாஜகவை தோற்கடித்தனர். ஆனால் மோடி அரசாங்கம் 2 ஊன்றுகோலின் உதவியின் மூலம் தொடர்ந்து அதிகாரத்தில் குடியிருந்து வருகிறது. ஒன்று ஆந்திராவின் சந்திரபாபு (தெலுங்கு தேசம்), மற்றொன்று பீகாரின் நிதிஷ் குமார் (ஐக்கிய ஜனதா தளம்).  ஐக்கிய ஜனதாதளம், தெலுங்கு தேசம் முஸ்லிம் மக்க ளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். ஒருவேளை முஸ்லிம்க ளின் உணர்வுகளைப் புறக்கணித்து வக்பு மசோதா நிறைவேற்றப்பட் டால், அதற்கு நிதிஷ் குமார், சந்திர பாபு தான் முழு பொறுப்பு. சந்திர பாபு மற்றும் நிதிஷ் குமாரின் என்ற 2 ஊன்றுகோல்கள் இல்லாவிட் டால், பாஜகவால் ஆட்சியில் அமர்ந்து இருக்க முடியாது என்பதை அவர் கள் நினைவில் கொள்ளட்டும்.

பிரிவினையை தூண்டுகிறார்கள்

நாங்கள் (முஸ்லிம்) இந்த நாட்டில் தான் வாழ்கிறோம். நாங்கள் வெளியில் இருந்து வர வில்லை. அதனால் அரசு எங்களை பாதுகாக்க வேண்டும். குஜ்ஜார் சமூகத்தில் இந்து, முஸ்லிம், சீக்கி யப் பிரிவுகள் உள்ளன. அதே போல ஜாட் சமூகத்தில் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் என தனித்தனியானவர்கள் உள்ளனர். இரண்டு சமூகங்களிலும் 3 மதங் கள் இருந்தாலும், ஜாட், குஜ்ஜார் என்றே ஒற்றுமையாக உள்ளனர். ஆனால் வகுப்புவாதம் மூலம் ஜாட், குஜ்ஜார் பிரிவுகளிலும் மட்டு மின்றி நாடு முழுவதும் பிரிவினை தூண்டப்பட்டு வருகிறது.

ஆந்திராவில் போராட்டம்

இம்மாத (நவம்பர்) இறுதி யிலோ அல்லது டிசம்பரிலோ ஆந்தி ரா முழுவதும் சந்திரபாபுவுக்கு எதிராக சுமார் 5  லட்சம் முஸ்லிம் கள் ஒன்றுகூடி, முஸ்லிம்களின் உணர்வுகளை அவர் முன் வைத்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள் ளோம்.” என அவர் கூறினார்.