தொலைதூர கற்றல் மற்றும் ஆன்லைன் வழிக் கல்வியை வழங்கும் உயர்கல்வி நிறுவனங்களின் அங்கீகார நிலையை மாண வர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என பல்க லைக்கழக மானியக்குழு எச்சரிக்கை விடுத்துள் ளது. இதுதொடர்பாக https://deb.ugc.ac.in/ என்ற இணையதளத்தில் அறியலாம் என பல்க லைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.
ஒடிசா மாநிலத்தில் கூட்டணி வேண்டாம் என பாஜகவை ஆளும் பிஜு ஜனதாதளம் துரத்திய நிலையில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு அம்மாநி லத்தின் சம்பல்பூர் தொகுதியில் ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் போட்டியிடு கிறார். போட்டியிட ஆள் இல்லாததால் தர்மேந்திர பிரதான் களமிறக்கப்பட்டுள்ளாரா? என சந்தேகம் கிளம்பியுள்ளது.
தனது மனைவி சுனிதா மூலமாக கெஜ்ரிவால் தில்லி நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், சுனிதாவையும் அமலாக்கத்துறை விசாரிக்க திட்ட மிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“இசட்” பிரிவு பாதுகாப்பை மீறி தில்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் மனைவியின் கார், திருடப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பழைய போனில் இருந்து மதுபான ஊழல் தொடர்பான பதிவுகள் இருந்ததாகக் கூறப்படும் விசாரணை அதிகாரிகளின் கூற்றுக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
காலிஸ்தான் பிரிவினைவாத குழுக்களிடம் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் சுமார் ரூ.133 கோடி பெற்றதாக, குர்பத்வந்த் சிங் பன்னுன் என்ற சீக்கிய பிரிவினைவாத தலைவர் குற்றம் சாட்டி உள்ளார். பாஜகவின் தூண்டுதலால் கூறி னாரா? இல்லை, சீக்கியர்கள் பெரும்பான்மை யாக வாழும் பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி இருப்ப தால் இவ்வாறு கூறினாரா? என்ற சந்தேகம் கிளம்பி யுள்ளது.
மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி 272 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று பாஜக வை ஆட்சியில் இருந்து அகற்றும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கெஜ்ரிவால் உள்ளிட்ட முக்கிய தலைவர் கள் சிறையில் இருப்பதால் ஆம் ஆத்மி கட்சி ஹோலி கொண்டாட்டத்தை புறக்கணித்தது.
காவிரி நதிநீரை தேவையில்லாமல் பயன் படுத்தியதற்காக பெங்களூரில் 22 குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 அபராதம் விதித்து அம்மாநில குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரி யம் உத்தரவிட்டுள்ளது. இந்த குடும்பங்களிடம் இருந்து மொத்தம் ரூ.1.1 லட்சம் அபராதம் வசூ லிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லக்னோ
பாஜகவிலிருந்து வெளியேறுகிறார்
வருண் காந்தி?
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி யின் இரண்டாவது மகனான சஞ்சய் காந்தியின் மனைவி மேனகா காந்தி, குடும்பப் பிரச் சனை காரணமாக பாஜகவில் அங்கம் வகிக்கும் நிலையில், அவரது மகன் வருண் காந்தியும் பாஜக எம்பியாக உள்ளார். மேனகா காந்தி பாஜகவிடம் உறவாடி ஒன்றிய அமைச்சர் பதவியை பெற்றார். ஆனால் வருண் காந்தி மோடி அரசின் மக்கள் விரோத கொள்கையை தனது குற்றச்சாட்டு மூலமாக போட்டு டைத்தார்.
இந்நிலையில், வரவிருக்கும் மக்க ளவைத் தேர்தலில் மேனகா காந்திக்கு பாஜக மீண்டும் சீட் (சுல்தான்பூர்) வழங்கி யது. ஆனால் மூன்று முறை எம்பியான வருண் காந்திக்கு சீட் மறுக்கப்பட்டுள் ளது. வருண் காந்தி தற்போது எம்பியாக உள்ள பிலிபிட் தொகுதியில் முன்னாள் காங்கிரஸ்காரரான உத்தரப்பிரதேச மாநில அமைச்சர் ஜிதின் பிரசாதாவுக்கு பாஜக சீட் வழங்கியுள்ளது. பிரதமர் மோடிக்கு எதிராக பேசியதன் காரண மாகவே வருண் காந்திக்கு சீட் மறுக்கப்பட் டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் அதிருப்தி அடைந்துள்ள தாகவும், விரைவில் பாஜகவை விட்டு வெளியேற உள்ளதாகவும் தகவல் வெளி யாகியுள்ளது.
லக்னோ
உத்தரப்பிரதேசத்தில் மலர்ந்த மத நல்லிணக்கம்
பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். இவர் முதல்வராக பொறுப்பேற்ற பின் மாநிலத்தில் இந்து - முஸ்லிம் மக்களிடை யேயான இடைவெளி மிக மோசமாக அதி கரித்துள்ளது. அதாவது பாஜக நிர்வாகி கள், எம்பி., எம்எல்ஏக்கள் தங்களது வெறுப்புப் பேச்சு மூலம் இந்து - முஸ்லிம் மக்களிடையே வன்முறையை தூண்டி வருகின்றனர். இதற்கு எதிராக முஸ்லிம் மக்கள் போராடினால், போராட்டக் களத் தில் இருக்கும் முஸ்லிம் மக்களின் வீடு களை புல்டோசர் மூலம் இடித்து வகுப்பு வாத அரசியலை மேலும் தூண்டி விடு கிறது ஆளும் பாஜக அரசு.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் நிலைமை இவ்வாறு உள்ள சூழலில் “இந் தியா” கூட்டணிக் கட்சிகளின் மதச்சார் பின்மை முன்னெடுப்பு அரசியல் விளக்க பொதுக்கூட்டங்கள் மற்றும் ராகுல் காந்தி யின் “இந்திய ஒற்றுமைக்கான நீதி யாத்திரை” காரணமாக அங்கு நிலைமை சற்று மாற்றமடைந்துள்ளது. இந்நிலை யில், பாரபங்கி நகரில் ஹோலி பண்டிகை மூலம் மதநல்லிணக்கம் மலர்ந்துள்ளது. திங்களன்று பாரபங்கி மசூதி முன்பு நடை பெற்ற ஹோலி கொண்டாட்டத்தில் இந்து மக்களுடன், முஸ்லிம் மக்களும் கலந்து கொண்டு கலர் பொடிகளை தூவி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.
மும்பை
ஏக்நாத் ஷிண்டேவை ஒழிக்க பாஜக தீவிரம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2022இல் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் - சிவசேனா ஆகிய கட்சிகளின் எம்விஏ கூட்டணி ஆட்சியை ஏக்நாத் ஷிண்டே மூலம் கவிழ்த்தது பாஜக. ஆட்சியை கவிழ்த்தது மட்டு மல்லாமல் 39 எம்எல்ஏக்களை வளைத்து ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவையும் இரண்டாக உடைத்தார். தற்போது பாஜக கூட்டணி ஆட்சியில் மகாராஷ்டிரா முதல் வராக ஏக்நாத் ஷிண்டே உள்ள நிலை யில், கட்சியின் பெயரையும் (சிவசேனா) மற்றும் சின்னத்தையும் (வில் அம்பு) மோடி அரசு மூலம் தேர்தல் ஆணையத்தி டம் பெற்றார்.
இந்நிலையில், கட்சியின் பெயர், சின் னம், எம்எல்ஏ, எம்பிக்களை இழுத்து சிவ சேனாவை ஷிண்டே கைப்பற்றினாலும், பிராந்திய தலைவர்கள், தொண்டர்கள், மக்கள் ஆதரவு என அனைத்தும் உத்தவ் தாக்கரே பக்கமே உள்ளது. இதனால் பால் தாக்கரேவின் மருமகனும், நவநிர் மாண் சேனா தலைவருமான ராஜ் தாக்க ரேவை தங்கள் பக்கம் இழுத்துள்ளது. இந்நிலையில், சிவசேனாவை - நவநிர் மாண் சேனா கட்சியுடன் இணைக்கவும் பாஜக உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது.