புதுதில்லி, பிப். 1 - ஒரு மாநிலத்திற்கு முதல்வராக இருக்கும் போதே- ஹேமந்த் சோரனை தனது கட்டுப் பாட்டில் விசாரணைக்கு கொண்டுவந்த ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை, முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி, கைதும் செய்தது. ராஞ்சியில் உள்ள ஹோட்வார் மத்திய சிறையிலும் ஹேமந்த் சோரனை அடைத்தது.
தொடர்ந்து வியாழனன்று காலை ராஞ்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சோரனை அம லாக்கத்துறையினர் ஆஜர்படுத்தினர். ஹேமந்த் சோரனை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியும் கோரின. ஆனால், 10 நாட்களுக்கு அனுமதி மறுத்துவிட்ட நீதிமன்றம், ஒரு நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை
இதனிடையே, அமலாக்கத்துறை சம்ம னுக்கு எதிராக ஹேமந்த் சோரன் உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்த ரிட் மனு வியாழனன்று விசாரணைக்கு வந்த நிலையில், விசாரணை ஒத்திவைக்கப்பட்டு வெள்ளியன்று விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மிகத் தெளிவான பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான கடிதம் கொடுத்ததும், உடனே புதிய ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பதே ஆளுநரின் மரபு. ஆனால் சம்பாய் சோரன் கடி தம் கொடுத்து 24 மணிநேரம் ஆகியும் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காதது கடும் சர்ச்சையை ஏற் படுத்தியுள்ளது. முதல்வர் கைது செய்யப்பட்டா லும், எதிர்கட்சியான பாஜக ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க முடியாது. காரணம் அக்கட்சி யின் கூட்டணிக்கு போதுமான பெரும்பான்மை கிடையாது. இதனால் ஜேஎம்எம் மற்றும் காங்கி ரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி குதிரை பேரம் மூலம் குறுக்கு வழியில் பாஜக ஆட்சி அமைப்பதற்காக, சம்பாய் சோரனுக்கு அழைப்பு விடுக்காமல் ஆளுநர் சி.பி.ராதா கிருஷ்ணன் தாமதம் செய்கிறாரா என்ற சந்தே கம் கிளம்பியுள்ளது.