மகாராஷ்டிராவில் நகரங்களின் முகலாயர் காலத்து பின்னணியிலான பெயர்களை மாற்றிய அரசின் முடிவுக்கு எதிராக தாக்கலான, பல்வேறு மனுக்களையும் மும்பை உயர்நீதி மன்றம் புதனன்று தள்ளுபடி செய்து உத்தர விட்டது.
பாலியல் வன்கொடுமை மற்றும் ஆள் கடத்தல் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் முக்கிய தலைவரும், எம்எல்ஏவுமான ரேவண்ணா வை மே 14 வரை நீதிமன்ற காவலில் சிறையில டைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் ரேவண்ணா அடைக்கப்பட்டார்.
ஐசிசி ஆண்கள் டி-20 உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் டிஸ்னி ஹாட்ஸ்டார் மொபைல் செயலி மூலம் இலவசமாக நேரடி யாக ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
மத்தியப்பிரதேசத்தில் வாக்குப்பதிவு எந்தி ரங்களை கொண்டு சென்ற பேருந்து தீ விபத்தில் சிக்கியது.
“குறிப்பிட்ட வேட்பாளர்களுக்கு பட்டியலின மக்கள் வாக்களிக்கக் கூடாது” என சமூக ஊடக பதிவு மூலம் அச்சுறுத்தியதாக எழுந்த புகாரில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, அதன் ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மாளவியாவுக்கு கர்நாடக போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. இதேபோல இரு சமூகங்களுக்கு இடையே மோதலைத் தூண்டும் வகையில் சமூக ஊடகத்தில் வீடியோ பதிவேற்றியதற்காக கர்நாடக மாநில பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா மீதும் அம்மாநில காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பச்சுப்பள்ளி பகுதியில் கனமழையால் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் குழந்தை உள்பட 7 பேர் பலியாகினர்.
“எனது அரசியல் வாழ்க்கையில் பாஜகவை போன்ற ஊழல் கட்சியை பார்த்ததில்லை” என்று ஆந்திர கல்வி அமைச்சரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மூத்த தலைவருமான சத்தியநாரா யணா தெரிவித்தார்.
“ஜெய்ஸ்ரீராம் என்று சொல்ல விரும்பா தவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லலாம்” என நடிகையும், பாஜக வேட்பாளருமான நவ்நீத் கவுர் ராணா (மஹாராஷ்டிரா) சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
கனடாவில் உள்ள சீக்கிய பிரிவினைவாத குழுக்கள், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் எச்சரிக்கை வரம்பை கடந்துள்ளதாக அந்நாட்டுக்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா கூறியுள்ளார்.
பாஜகவின் கூட்டாளி மாயாவதி?
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மோடிக்கு எதிரான பிம்பத்தை காட்டிக்கொண்டாலும் “இந்தியா” கூட்ட ணியில் இணைய மறுத்தது. காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் “இந்தியா” கூட்டணியில் சேருமாறு பல்வேறு முறை அழைப்பு விடுத்தாலும், மாயாவதி கூட்ட ணியில் சேர மறுப்பு தெரிவித்து விட்டார். குறிப்பாக மக்களவை தேர்தல் நெருங்கிய பின்பு மோடிக்கு எதிராக பேசுவதையே மாயாவதி முற்றிலும் குறைத்த நிலையில், சமீபத்தில் நிறைவு பெற்ற மாநிலங்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள், பாஜகவிற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதற்கு பரிசாக தனது அரசியல் வாரிசான ஆகாஷ் ஆனந்திற்கு மோடி அரசு “ஒய் பிளஸ்” பாதுகாப்பு வழங்கியது. இந்த சம்பவத்திற்கு பிறகு மாயாவதி பாஜகவின் கூட்டாளி என “இந்தியா” கூட்டணி கட்சி யினர் குற்றம் சாட்டிய நிலையில், தற்போது பாஜகவை விமர்சித்த விவகாரத்தில் ஆகாஷ் ஆனந்தின் கட்சிப் பதவியை பறித்ததன் மூலம் மாயாவதி பாஜகவின் உண்மை யான கூட்டாளி என்பது அம்பலமாகியுள்ளது.
புதுதில்லி
ஏர் இந்தியா ஊழியர்கள் வேலை நிறுத்தம்
விமான சேவைகள் பாதிப்பு
இந்திய பொதுத்துறை நிறுவனமாக இருந்த ஏர் இந்தியா விமான நிறு வனம் கடந்த 2022 ஜனவரி 27 அன்று டாடா நிறுவனத்திற்கு தாரை வார்த்தது மோடி அரசு. நன்கொடை பணத்திற்காக மோடி அரசு இவ்வாறு செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், கடந்த சில நாட்களாக ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்று மாறு நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்த னர். இந்த வலியுறுத்தலை டாடாவின் ஏர் இந்தியா நிறுவன நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இதனால் புதன் கிழமை அதிகாலை முதல் முன்னறிவிப் பின்றி ஏர் இந்தியா விமான நிறுவன ஊழி யர்கள் (கேபின்) வேலை நிறுத்தப் போரா ட்டத்தை தொடங்கினர். ஏர் இந்தியா ஊழி யர்களின் இந்த திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தால் நாடு முழுவதும் விமான சேவை மிக மோசமான அளவில் பாதிக் கப்பட்டுள்ளது. புதனன்று மாலை நில வரப்படி 80க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாக்கியுள்ளனர்.
ஹைதராபாத்
தோல்வி பயத்தால் அதானி, அம்பானியையும் விமர்சிக்க தொடங்கிய மோடி
18ஆவது மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி 350 இடங்க ளுக்கு மேல் வெற்றி பெற்று “இந் தியா” கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என பெரும்பாலான ஊடகங்கள் கருத் துக்கணிப்பு மூலம் தகவல் தெரிவித்து வருகின்றன. இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளால் பதற்றத்தில் உள்ள பிரத மர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் என்ன செய்வது என்று தெரியாமல் வெறுப்பை யும் உளறலையுமே பிரச்சாரமாக மேற் கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தெலுங்கானாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிர தமர் மோடி, தோல்வி பயத்தால் தனது நெருங்கிய நண்பர்களான அதானி, அம் பானியையும் விமர்சித்து பிரச்சாரம் செய்ய துவங்கிவிட்டார். தேர்தல் இந்த பிரச்சாரத்தின் பொழுது மோடி, “தேர்தல் அறிவித்ததில் இருந்து அதானி, அம் பானி குறித்து விமர்சிப்பதை காங்கிரஸ் நிறுத்திவிட்டது. அதனால் அதானி, அம் பானியிடம் இருந்து காங்கிரஸ் எவ்வ ளவு கருப்புப் பணத்தை பெற்றது? இரு வரையும் பற்றி பேசாமல் இருக்க காங்கி ரஸ் அவர்களிடம் எவ்வளவு டீல் பேசி யது?” என பேசினார். அமித் ஷாவிற்கு அடுத்து மிக நெருக்கமாக உள்ள அதானி மற்றும் அம்பானி குறித்து பிரதமர் மோடி பேசியதன் மூலம் அவரது தோல்வி பயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மலம்புழா
யானை தாக்கியதில் ஊடகவியலாளர் உயிரிழப்பு
கேரள மாநிலம் பாலக்காடு மாவட் டத்தின் மலம்புழா பகுதியின் விவசாய நிலப்பகுதியில் காட்டு யானை தாக் குதல் நடத்துவது தொடர் கதையாக உள்ளது. இந்நிலை யில், இந்த விவகா ரம் குறித்து செய்தி சேகரிக்க மலை யாள செய்திச் சேனல் களைச்சேர்ந்த ஊடகக் குழுவினர் மலம் புழா பகுதிக்குச் சென்றனர். புதனன்று காலை 8 மணியள வில் ஊடகக் குழுவினர் நின்ற பகுதியில் காட்டு யானை புகுந்தது.
யானையைக் கண்டதும் ஊட கக் குழுவினர் அனைவரும் கீழ்ப் பகு திக்கு ஓடினர். ஆனால் ஏ.வி.முகேஷ் (34) என்பவர் மட்டும் கால் தடுமாறி விழுந் தார். அதிவேகமாக வந்த காட்டு யானை ஏ.வி.முகேஷை மிதித்து தாக்கியது. இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த ஏ.வி. முகேஷ், பாலக்காடு அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி ஏ.வி.முகேஷ் உயிரிழந்தார். உயிரிழந்த ஏ.வி.முகேஷ் முன்னணி மலையாள செய்தி நிறுவனமான மாத்ருபூமியின் ஒளிப்பதிவாளராவார்.