india

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கோவாவின் வடக்கு பகுதியில் தனது அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோரக் கடைகளில் பிரபல உண வுப் பொருளான “கோபி மஞ்சூரியனை” விற்கத் தடை விதித்துள்ளது. கோபி மஞ்சூரியன் உண வில் சுகாதாரமற்ற, உடலுக்கு தீங்கு விளைவிக் கும் பொருள்கள் இருப்பதால் இந்த முடிவு எடுக்  கப்பட்டதாக அம்மாநில அதிகாரிகள் தெரி விக்கின்றனர்.

 கர்நாடக மாநிலம் தும்கூரில் காதல் விவகார கார ணமாக மூன்று மாத கர்ப்பிணியை பெற்றோரே தூக்கில் தொங்க விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யெஸ் வங்கியில் முதலீடுகளை 9.50 சத வீதம் அதிகரிக்க எச்டிஎப்சி நிறுவனம் முடிவு செய்ததை அடுத்து அந்த வங்கியின் மதிப்பு  13 சதவீதம் உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் ஒன்றிய அரசின் காவல் படை களான சிஆர்பிஎப், பிஎஸ்எப் மற்றும் சிஐஎஸ்எப் ஆகியவற்றில் 41,606 பெண்கள் பணி யாற்றுவதாக மக்களவையில் உள்துறை இணை யமைச்சர் நித்யானந்த் ராய் தகவல் தெரிவித்தார்.  

இமாச்சலப்பிரதேச மாநிலம் சிம்லாவில் செவ்  வாயன்று காலை ஏற்பட்ட திடீர் நிலச்சரி வால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இத னால் மாநிலத்தின் முக்கிய நகரங்கள் துண்டிக்கப் பட்டுள்ள நிலையில், நிலச்சரிவு மீட்பு பணியின் பொழுது 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரி ழந்ததனர்.உயிரிழந்த இருவரும் பீகார் மாநி லத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோகான் குழும நிறுவனங்களுக்கு கடன் வழங்கிய வழக்கில் சந்தா கோச்சாரை சிபிஐ  கைது செய்தது சட்டவிரோதம் என மும்பை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தி உள்ளது.

“மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி “இந்தியா” கூட்டணியில்தான் இருக்கி றார். “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான உறுப்பினர்கள் இன்னும் கூட்ட ணியில்தான் உறுப்பினர்களாக உள்ளனர்” என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறியுள்ளார்.

“இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் உள் ளிட்ட மதச்சிறுபான்மையினரையும் ஏற்கக்கூடி யது எங்கள் இந்துத்துவா” என சிவசேனா (உத்தவ்) கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

பெங்களூரு
கர்நாடக முதல்வருக்கு சம்மன்
ரூ.10,000 அபராதம்

கடந்த 2022-ஆம் ஆண்டு கர்நாடக  மாநிலத்தில் பாஜக ஆட்சியின் போது ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் மர்மமான முறையில் உயிரி ழந்தார். சந்தோஷ் பாட்டீல் உயிரிழப் புக்கு அப்போதைய பாஜக அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பாவுக்கு தொடர்பு இருப்பதாகப் புகார் எழுந்தது. அவரை கைது செய்ய வலியுறுத்தியும், முதல்வ ராக இருந்த பசவராஜ் பொம்மை பதவி  விலக வேண்டும் என்று வலியுறுத்தியும் எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் சார் பில் தற்போதைய முதல்வர் சித்தராமையா தலைமையில் முதல்வர் இல்லம் நோக்கி பேரணி நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தின் போது பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகக் கூறி அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கர் நாடக உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த  மனு செவ்வாயன்று விசாரணைக்கு வந்த  நிலையில், ரத்து செய்யக் கோரும் மனு வை தள்ளுபடி செய்து, சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு உயர்நீதிமன்றம் ரூ.10,000 அபராதம் விதித்தது.

மேலும் முதல்வர் சித்தராமையா, அமைச்சர்கள் எம்.பி.பாட்டீல்,  ராமலிங்க ரெட்டி மற்றும் காங்கிரஸ் தலை வர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோர் தனித்தனியாக சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்ட நீதி பதி அதற்கான தேதியையும் அறிவித்தார்.

போபால்
பட்டாசு ஆலை விபத்து:
11 பேர் பலி
100 பேர் காயம்

மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள  நர்மதாபுரம் மாவட்டத்தின் ஹர்தா  பகுதியில் பட்டாசு தயாரிக்கும் ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த  ஆலையில் 150-க்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். செவ்  வாயன்று மதியம் ஆலையின் உள்பகுதி யில் திடீரென தீவிபத்து ஏற்பட, அருகில்  இருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின. சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பட்  டாசுகள் வெடித்து சிதறியதால், ஆலைக்கு அருகில் இருந்த 60-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கும் தீபரவியது.

தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள்  நீண்ட நேரம் போராடியும் தீயை கட்டுக்  குள் கொண்டு வர முடியாததால், தேசிய  மீட்பு பணி வீரர்களுக்கு நர்மதாபுரம் ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

பாட்டாசு புகையால் ஹர்தா பகுதி  வெண்ணிற போர்வையால் மூடப்பட்ட நிலையில், இந்த விபத்தில் 11 பேர் பலி யாகியுள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர்  காயமடைந்துள்ளனர். 

வாரணாசி
ஞானவாபி மசூதி
பிப்.15-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு


கடந்த வாரம் ஞானவாபி மசூதி யில் உள்ள பாதாள அறையில் இந்து மத பூஜைக்கு அனுமதி வழங்கியது வாரணாசி நீதிமன்றம். 

இதற்கு மசூதி நிர்வாகம், முஸ்லீம்  அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த னர். ஆயினும் இந்துத்துவா அமைப்பு பூட்டை உடைத்து பூஜை நடத்தி வரு கின்றது. இந்நிலையில், தொடர்ந்து மசூதி வளாகத்தினுள் பூட்டப்பட்டு கிடக்கும் அனைத்து ரகசிய அறைகளையும் திறக்க வும், தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டும் என விஸ்வ  வேதிக் சநாதன சங்கத்தைச் சேர்ந்த ராக்கி  சிங் வாரணாசி நீதிமன்றத்தில் புதிய மனு வை தாக்கல் செய்தார்.

இந்த மனு செவ்வாயன்று விசார ணைக்கு வந்தது. அப்போது, மனு மீதான  விசாரணையை பிப்.15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது வாரணாசி நீதிமன்றம்.