உலக பட்டினி குறியீட்டில் கடந்த 2022-ஆம் ஆண்டு 107 ஆவது இடத்திலிருந்த இந்தியா, தற்போது 28.7% பெற்று 111-ஆவது இடத்தில் பின்தங்கி உள்ளது. இது இந்தியாவில் பட்டினி அளவு தீவிர நிலையை அடைந்துள்ளது என்பதை குறிக்கிறது.
சர்வதேச அளவில் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து ஆண்டுதோறும் உலகப் பட்டினிக் குறியீடு வெளியிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உலக பட்டினி குறியீட்டில் கடந்த 2022-ஆம் ஆண்டு 107 ஆவது இடத்திலிருந்த இந்தியா, தற்போது 28.7% பெற்று 111-ஆவது இடத்தில் பின்தங்கி உள்ளது. இது இந்தியாவில் பட்டினி அளவு தீவிர நிலையை அடைந்துள்ளது என்பதை குறிக்கிறது.
மேலும், உலக பட்டினி குறியீட்டில், அண்டை நாடுகளான பாகிஸ்தான் 102ஆவது இடத்திலும், வங்கதேசம் 81ஆவது இடத்திலும், நேபாளம் 69ஆவது இடத்திலும், இலங்கை 60ஆவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.