தில்லியில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்த ஜி-20 உச்சி மாநாடு நிறைவு பெற்றது.
இந்தியா தலைமை தாங்கும் ஜி-20 மாநாடு தில்லியில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஜி-20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள், பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இம்மாநாட்டில் பொருளாதாரம் மேம்பாடு, காலநிலை மாற்றம், எரிசக்தி விவகாரம் ,சர்வதேச கடன் கட்டமைப்பு, சீர்திருத்தம், கிரிப்டோ கரன்சி மீதான கட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், ஆப்பிரிக்க யூனியனை நிரந்தர உறுப்பினராக ஜி20 நாடுகளில் இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடைசி நாளான இன்று, 2024-ஆம் ஆண்டில் ஜி20 உச்சி மாநாட்டை நடத்தும் தலைமை பொறுப்பை பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவிடம் பிரதமர் நரேந்திர மோடி ஒப்படைத்தார்.