india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பீகாரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்  பாக நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்ட  நிலையில், ஒரு மாணவருக்கு ரூ.30 லட்சம் வரை பணம் கைமாறியது முதற்கட்ட விசாரணையில் அம்பலமாகியுள்ளது. 

விவசாயிகளுக்கு மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் பிஎம்  கிசான் திட்டத்தின் 17-வது தவணையை வாரணாசி யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார்.

பாலியல் வழக்கில் கைதான பிரஜ்வல் ரேவண்ணாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து எம்பி, எம்எல்ஏ.க்களுக்கான பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. பெண் கடத்தல் வழக்கில் பவானி  ரேவண்ணாவிற்கு (பிரஜ்வல் தாயார்) முன் ஜாமீன் வழங்கியது கர்நாடகா உயர்நீதிமன்றம்.

தேர்தல் கருத்துக் கணிப்புகளைத் தொடர்ந்து நடந்ததாகக் கூறப்படும் பங்குச் சந்தை முறைகேடு குறித்து விசாரணை நடத்துமாறு திரி ணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் குழுவினர் செபி அதிகாரிகளை சந்தித்து, கோரிக்கை விடுத்தனர்.

ஆங்கில வழிப் பள்ளிகள் மீதான பெற்றோ ரின் மோகம் என்பது தற்கொலைக்கு நிகரா னது என்று தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி  கவுன்சிலின் (என்சிஇஆர்டி) தலைவர் டி.பி. சக்லானி தெரிவித்துள்ளார்.

விபத்து நடந்து 24 மணிநேரம் ஆகாத நிலை யில், கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் சம்பவ இடத்தில் இருந்து கொல்கத்தா அடுத்த சீல்டாவை நோக்கி மீண்டும் புறப்பட்டது. நாடு முழுவதும் இச்சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், கொல்கத்தா மேயர் பிர்ஹாத் ஹக்கீம் கூறுகையில்,”கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலை அதே மார்க்கத்தில் மீண்டும் இயக்கி பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு மக்களின் உயிருடன் விளையாடுகிறது. மக்கள் இறப்பதற்காக அவர்கள் காத்திருக்கிறார்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

“நீட் தேர்வில் பாஜக ஆளும் மாநிலங்களில் திட்ட மிட்டு முறைகேடு நடத்தப்பட்டுள்ளது. நீட் தேர்வால் 24 லட்சம் மாணவர்கள் வாழ்க்கை கேள்விக்குறியான போதும் வழக்கம்போல் பிரதமர் மோடி மவுனம் காக்கிறார். பீகார், குஜராத்,  ஹரியானா மாநிலங்களில்தான் நீட் தேர்வு முறை கேட்டில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ள னர் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

கவுகாத்தி
மிதக்கும் அசாம்: மேகாலயாவிற்கும் அதீத கனமழை எச்சரிக்கை
கலக்கத்தை ஏற்படுத்தும்
பிரம்மபுத்திரா ஆற்றின் நீர்மட்டம்

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்  றான அசாம் மற்றும் அண்டை மாநிலங்களில் கடந்த ஒருவார மாக இடைவிடாத கனமழை பெய்து வரு கிறது. இதில் அசாமின் நிலைமை மிக மோசமாக உள்ளது. அம்மாநிலத்தின் தலைநகர் கவுகாத்தி, அனில் நகர் மற் றும் சந்த்மாரி பகுதிகள் தனித்தீவானது போல கனமழையால் முற்றிலும் இயல்பு நிலையை இழந்துள்ளன. ஏற்கெனவே  அசாம் மாநிலத்தின் பெரும்பாலான பகு திகள் கனமழையால் மிக மோசமான பாதிப்பை எதிர்கொண்டு வரும் நிலை யில், பிரம்மபுத்திரா ஆற்றின் நீர்மட்டம் வேறு கலக்கத்தை ஏற்படுத்தி வரு கிறது.

பிரம்மபுத்திரா ஆற்றின் கிளை நதி யான கோபிலி ஆற்றில் அபாய அளவைத்  தாண்டி வெள்ள நீர் பாய்ந்து வருவ தால், நாகோன் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்களுக்கு அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்நிலையில், அசாம் மற்றும் மேகா லயா ஆகிய மாநிலங்களில் அடுத்த  3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்  றும், ஜூன் 20 அன்று இருமாநிலங்களி லும் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள் ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கனமழை ஒருபக்கம் பதற்றத்தை ஏற்  படுத்தினாலும் பிரம்மபுத்திரா ஆற்றின் நீர்மட்டமே அதிக அச்ச உணர்வை ஏற் படுத்துவதாக அசாம் மக்கள் பீதியுடன் உள்ளனர்.