india

img

‘பத்மஸ்ரீ’ விருதையும் திரும்ப ஒப்படைப்பதாக மோடிக்கு கடிதம்

புதுதில்லி, டிச. 22 - இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய  தலைவராக, அந்த அமைப்பின் முன்னாள் தலைவரும், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் நெருங்கிய உதவியாளர் சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

அதாவது இந்திய மல்யுத்த கூட்ட மைப்பு மறைமுகமாக பிரிஜ் பூஷன் கைக்கே மீண்டும் சென்றுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாழனன்று ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனையும், பிரிஜ் பூஷனின் பாலியல் வக்கிரங்களுக்கு எதிராக தில்லி ஜந்தர் மந்தரில்  போராடியவருமான சாக்சி மாலிக் மல்யுத்தத்தில் இருந்து விடைபெறுவதாக கண்ணீர் மல்க வியாழனன்று அறிவித்தார்.

“நாங்கள் எங்கள் இதயத்திலிருந்து போராடினோம், ஆனால் பிரிஜ் பூஷனின் வணிக கூட்டாளியும் அவரது நெருங்கிய உதவியாளருமான சஞ்சய் சிங் தலைவ ராக தேர்வாகி உள்ளார். இதனால் நான், மல்யுத்தத்தை விட்டு விலகுகிறேன். நாங்கள், ஒரு பெண் தலைவராக வர வேண்டும் என விரும்பினோம். ஆனால் அது நடக்கவில்லை” என்று கூறி தனது காலணிகளை (ஷூ) செய்தியாளர்கள் சந்திப்பு மேடையில் கண்ணீர் மல்க வைத்து அந்த இடத்தை விட்டு சாக்சி மாலிக் வெளியேறினார்.

பஜ்ரங் புனியாவும் விலகல்; பத்மஸ்ரீ-யையும் கைவிட்டார்!
 இந்நிலையில், சாக்சி மாலிக்கை தொடர்ந்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மற்றொரு வீரரான பஜ்ரங் புனியாவும், சஞ்சய் சிங் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரி வித்து மல்யுத்தத்தில் இருந்து விலகுவ தாக வெள்ளியன்று அறிவித்துள்ளார். இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

“அன்புள்ள பிரதமரே.. மல்யுத்த வீரர்களின் விஷயத்தில் உங்களின் கவனத்தை பெற முயல்கிறேன். ஜனவரியில் பிரிஜ் பூஷனுக்கு எதிராக 19 புகார்தாரர்கள் இருந்தனர். ஏப்ரல் மாதத்துக்குள் இந்த எண்ணிக்கை 7 ஆக குறைந்தது. இதற்கு காரணம் பிரிஜ் பூஷன் 12 மல்யுத்த வீராங்கனைகளிடம் தனது செல்வாக்கை காண்பித்து மிரட்டி யதுதான். போராட்டத்தளம் இடிக்கப் பட்டு, நாங்கள் தில்லியில் இருந்து வெளி யேற்றப்பட்டதோடு போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டது. நாங்கள் வென்ற பதக்கங்களை கங்கை நதியில் வீச முடி வெடுத்தோம். தற்பொழுது பிரிஜ் பூஷ னின் தொழில் கூட்டாளி மற்றும் அவரின் நெருங்கிய உதவியாளரே இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவ ராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த  தேர்வால் நான் மல்யுத்தத்தை கைவிடு கிறேன். இன்று முதல் நீங்கள் என்னை மல்யுத்த களத்தில் பார்க்க மாட்டீர்கள். எனது பத்மஸ்ரீ விருதையும் திரும்ப ஒப்படைக்கிறேன்” என்று பஜ்ரங் புனியா  உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

பெற்றோர் இனி பிள்ளைகளை விளையாட அனுப்புவார்களா?
வீரர்களின் விலகல் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் ஒலிம்பிக் குத்துச் சண்டை போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியரான விஜேந்தர் சிங், “மல்யுத்த போட்டிகளில் தங்கம் வென்ற அந்த வீராங்கனை வேண்டியது எல்லாம் நீதி மட்டுமே. ஆனால், அது  அவருக்குக் கிடைக்கவில்லை. இதனால்,  வேதனை அடைந்த அவர் ஓய்வை அறிவித்துள்ளார். இதனால், உலக அளவில் இந்தியாவின் பிம்பம் உயருமா, குறையுமா? ஒட்டுமொத்த விளையாட்டுத் துறையும் ஏமாற்றமடைந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். 

ஜனாதிபதியும், பிரதமரும் பதிலளிக்க வேண்டும்!
மேலும், “இதற்குப் பின்னர் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை விளையாடுவதற்கு அனுப்புவார்களா? ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங் கனைகளுக்கே நீதி கிடைக்கவில்லை என்றால் தங்களுக்கு எப்படி கிடைக்கும் என்று அவர்கள் கவலை அடைவார்கள். பிரதமர், குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் ஆகியோர் ஏன் இது நடந்தது என்று பதிலளிக்க வேண்டும். இது நீதி அமைப்பின் மீதும், ஜனநாயக கட்டமைப்பின் மீதும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.