india

img

பிப். 2ல் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

புதுதில்லி, ஜன.28-
சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியிடப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய் தொற்று காரணத்தால் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டு, இணைய வழியில் பாடம் கற்பிக்கப்பட்டு வந்தன. தற்போது பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியிடப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

;