tamilnadu

இளங்கலை, முதுகலை இறுதிபருவத் தேர்வு காந்திகிராம பல்கலை., அறிவிப்பு

சின்னாளபட்டி:
இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புக்கான இறுதிபருவத் தோ்வுகள் ஆஃப் லைன் முறையில் நடைபெறும் எனகாந்தி கிராம கிராமியப் பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.இதுகுறித்துஅப்பல்கலை. வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,” 2020ஆம் ஆண்டுக்கான இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புக்கான இறுதி பருவத் தேர்வுகளை நடத்துவதற்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த இறுதி ஆண்டு பயிலும் மாண
வர்களுக்கான இறுதிப் பருவத் தேர்வுகள் செப்டம்பா் 17 முதல் நேரடித் தோ்வுகளாக ஆஃப் லைன் முறையில்நடத்தப்படவுள்ளன. தேர்வு நேரம் 2 மணி நேரமாககுறைக்கப்பட்டுள்ளது. தோ்வுகளின் கால அட்டவணை அனைத்து இறுதிப் பருவத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கும் மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.

;