india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

நாட்டின் நேரடி வரி வசூல் 2023-24 நிதி யாண்டில் ரூ.19.58 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்  ளது. 2022-23 வசூலான நேரடி வரித்தொகை யான ரூ.16.64லட்சம் கோடியை விட முடிந்த ஆண்டில் வரிவசூல் 17.7 % உயர்ந்துள்ளது. 2023- 24 பட்ஜெட் மதிப்பீடான ரூ.18.23 லட்சம் கோடியை  விட ரூ.1.35 லட்சம் கோடி அதிகமாக வசூலாகி உள்ளன.

“இந்தியா” கூட்டணியில் இருந்து பிரிந்து செல்ல மறுத்ததற்காக ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் சிறைக்கு அனுப்பப்பட்டார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். 

ராஜஸ்தான் மாநிலம் ஜலாவார் மாவட் டத்தில் லாரி மீது வேன் மோதியதில் 9 பேர்  உயிரிழந்தனர். பலர் பலத்த காயமடைந்துள்ள தால் பலி எண்ணிக்கை உயரும் என தகவல் வெளி யாகியுள்ளது.

ஹரியானா மாநிலம் குருகிராமில் சுடுகாடு சுவர் இடிந்து விழுந்ததில் 11 வயது சிறுமி உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு அரசியல் சட்டத்தை மாற்றியும், மக்க ளின் உரிமைகளைக் பறிக்கவும் விரும்புகிறது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற பிரச்சா ரப் பொதுக்கூட்டத்தில் பேசினார்.

ஒடிசா மாநிலத்தில் வெயில் கொளுத்தி வருவதால் பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 25 முதல் முன்கூட்டியே கோடை விடுமுறை தொடங்கும் என்றும், இன்னும் 4 நாட்களுக்கு காலை 6.30 முதல் 10.30 வரை காலை வகுப்பு கள் நடைபெறும் என ஒடிசா அரசு ஞாயிறன்று அறிவித்துள்ளது. 

சத்தீஸ்கர் மாநிலத்தில் மதுபான ஊழல் வழக்கில்  ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி துதேஜாவை அமலாக்கத்துறை ஞாயிறன்று கைது செய்தது. அடுத்ததாக காங்கிரஸ் தலைவர்களை கைது செய்ய அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்தியில் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் உற்பத்தி, வர்த்தகம் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான வசதிச் சட்டம் 2020, இந்திய தண்டணைச் சட்டத்திற்கு (IPC) இணை யான பாரதிய நியாய சன்ஹிதா, குற்றப்பிரிவு  தண்டனைச் சட்டம் (CrPC) என்ற பாரதிய நாகரிக்  சுரக்சா சன்ஹிதா மற்றும் ஆதாரச் சட்டமான பார திய சாக்சயா சட்டம், தொழிலாளர் சட்டங்கள்  உட்பட 25 சட்டங்களில் உரிய திருத்தங்கள் மேற் கொள்ளப்படும்” என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் அறிவித்துள்ளார். 

சண்டிகர்
சண்டிகரில் 5-ஆவது நாளாக நீடிக்கும் விவசாயிகளின் போராட்டம்

பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தியும், கைது செய்யப்பட்ட 3 விவசாய  தலைவர்களை விடுவிக்கக் கோரியும், விவசாயிகளுக்கு எதிரான மோடி அரசின் நடவ டிக்கைக்கு எதிராகவும் சம் யுக்த கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்), கிசான் மஸ்தூர்  மோர்ச்சா உள்ளிட்ட பல்வேறு  விவசாய அமைப்புகள் சண்டி கருக்கு அருகே பாட்டியாலா மாவட்ட ரயில் நிலைய தண்டவாளத்தில் கடந்த 5 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்ற னர். இந்த போராட்டத்தை மோடி அரசு கண்டு கொள்ளாத நிலையில், கோரிக்கைகள் ஏற்கும் வரை  போராட்டக்களத்தை விட்டு நகர மாட்டோம் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், விவசாயிகளின் தொடர் போராட்  டத்தால் அம்பாலா-அமிர்தசரஸ் வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. 50க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட் டுள்ளதால் சண்டிகர் - பாட்டியாலா இடைப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இம்பால்
மணிப்பூரில் இன்று மீண்டும் வாக்குப்பதிவு
11 வாக்குச்சாவடிகளில் நடைபெறுகிறது

2 மக்களவை தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு கட்ட மாக தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலை யில், வெள்ளியன்று நடைபெற்ற முதல்  கட்டத்தில் ஒரு தொகுதி மற்றும் குறிப்  பிட்ட சில பகுதிகளுக்கு நடைபெற்றது. மணிப்பூர் மாநிலமே வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வாக்குப் பதிவு நடைபெறும் அனைத்து பகுதிகளி லும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்  பட்டு இருந்தது. பலத்த பாதுகாப்பை மீறி  தமான்போக்பி, ஹிரோய் ஷம்பா,  மொய்ராங்காம்பு, சஜேப் உள்ளிட்ட பல்  வேறு பகுதிகளில் அமைக்கப்பட்ட வாக் குச்சாவடிகளில் வன்முறை வெடித்தது. இதனால் அங்கு வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 

இந்நிலையில், வன்முறையால் பாதிக் கப்பட்ட 11 வாக்குச்சாவடிகளுக்கு திங்களன்று மீண்டும் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணை யம் அறிவித்துள்ளது.

அகமதாபாத்
பாஜக எம்எல்ஏவை முற்றுகையிட்ட 
ராஜ்புத் சமூகத்தினர்

தங்கள் சமூகத்தை இழிவாக பேசி யதால் நாடு முழுவதும் 22 கோடி  மக்கள் தொகையில் ராஜ்புத்திரர் கள் பாஜகவிற்கு எதிராக திரும்பியது மட்டுமல்லாமல், மகா பஞ்சாயத்து மூலம்  பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தி பாஜகவிற்கு வாக்களிக்க மாட்டோம் என  உறுதி மொழியும் ஏற்றனர்.

பாஜகவிற்கு எதிரான ராஜபுத்திரர் களின் எதிர்ப்பு அலை தீவிரமடைந்து வரும் நிலையில், குஜராத் மாநிலத்தில் சனியன்று சபர்கந்தா பகுதியில் மக்க ளவை தேர்தலுக்கான வாக்குச் சேக ரிப்பு பிரச்சாரத்திற்கு வந்த இத்ரா  தொகுதி பாஜக எம்எல்ஏ ரமண்லால் ஓரா  பங்கேற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத் திற்குள் புகுந்து,”எங்கள் சமூகத்தை இழி வாக பேசி, எப்படி இங்கு பிரச்சாரம்  செய்யலாம்” என கேள்வி எழுப்பி ராஜ்  புத் சமூகத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ராஜ்புத்திரர் களின் போராட்டத்தால் பாஜக எம்எல்ஏ வான ரமண்லால் ஓரா வந்த வழியாகவே  ஓட்டம் பிடித்தார். குஜராத்தில் ராஜ்புத்தி ரர்களுக்கு 17% வாக்குகள் உள்ளது என்  பது குறிப்பிடத்தக்கது.

வன்முறை வெடிக்க வாய்ப்பு
பிரச்சாரம் மேற்கொள்ளும் இடங்க ளிலெல்லாம் ராஜபுத்திரர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவதால் பாஜகவினர் அடி யாட்கள் போன்று ஒரு கூலிப்படை கூட்  டத்தை தனியாக அழைத்துச் செல்கிறார்  கள். போலீஸ் பாதுகாப்பு இருந்தாலும், இந்த பாஜக கூலிப்படை தான் ராஜபுத்தி ரர்களை தடுக்கிறார்கள். சில நேரங்க ளில் ராஜபுத்திரர்கள் மீது தாக்குதலும் நடத்துகிறார்கள். இதனால் இனி வரும்  காலங்களில் ராஜபுத்திரர்கள் - பாஜகவின ரிடையே மோதல், வன்முறை சம்பவங் கள் அரங்கேற வாய்ப்பு ஏற்படும் சூழல்  உருவாகியுள்ளது.

கொல்கத்தா
“இந்தியா” கூட்டணிக்கு ஆதரவாக நடிகர் ஷாருக்கான் பிரச்சாரம்?

இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ஷாருக்கான் பாலிவுட்  துறையில் மட்டுமின்றி தமிழ் உள்  ளிட்ட தென்னிந்திய இயக்குநர்களின் படங்களிலும் நடித்து வருகிறார். நாடு  முழுவதும்  ஷாருக்கானுக்கு ரசிகர் பட்டா ளம் உள்ள நிலையில், மேற்குவங்க மாநி லத்தில் “இந்தியா” கூட்டணிக்கு ஆதர வாக ஷாருக்கான் பிரச்சாரம் மேற்கொண்  டதாக வீடியோ ஒன்று சமூகவலைதளங்  களில் வைரலாகி வருகிறது. அந்த வீடி யோவில் நடிகர் ஷாருக்கான் சோலாப்பூர்  காங்கிரஸ் வேட்பாளர் பிரனிதி ஷிண்டே வை ஆதரித்து வாகனத்தில் பிரச்சாரம் செய்வது போன்று உள்ளது. எனினும் இந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து இதுவரை எந்த தகவலும் வெளி யாகவில்லை.