india

img

அலோபதிக்கு எதிராக தவறான விளம்பரங்கள்

மோடி குஜராத் முதல்வராக இருந்த பொழுது பாபா ராம்தேவ் வெறும் யோகா சாமியாராக இருந்தார். அவரை நாட்டு மக்  களுக்கு அவ்வளவாக தெரி யாது என்ற நிலையில், 2014இல் மோடி பிரதமரான பின்பு தனக்கு நெருக்கமான ஆச்சார்யா பாலகிருஷ்ணா உடன் இணைந்து பதஞ்சலி என்ற நிறுவனத்தை தொடங் கினார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவருக்கு எப்படி இவ்வளவு பணம் கிடைத்தது என்று தெரியவில்லை, ஆனால் உத்தரகண்ட் மாநிலம் ஹரித்  வாரில் பன்னாட்டு கார்ப்ப ரேட் நிறுவனத்திற்கு ஈடாக  பிரம்மாண்ட தொழிற்சாலை யை கட்டி, நாட்டின் முன் னணி கார்ப்பரேட் நிறுவனம் போன்று உருவானது அவரது பதஞ்சலி நிறுவனம்.

தற்போதைய சூழலில்  பதஞ்சலி நிறுவனம், இயற் கையாக செய்யப்படுகிறது என்று கூறி தேன், டூத் பேஸ்ட்,  சோப்புகள், ஷாம்பு, ஊட்டச்  சத்து பொருட்களை விற் பனை செய்து வருகிறது. தரத்  தில் சந்தேகம் உள்ளதால்  நாட்டு மக்கள் பதஞ்சலி  பொருட்களை வாங்குவ தில்லை. பாஜக ஆளும் மாநி லங்கள் மட்டுமே பதஞ்சலி  பொருட்களை விற்பனை செய்ய உதவி வருகின்றன. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநி லங்களில் பதஞ்சலி பொருட்கள் இருப்பதே தெரியாது. இதனால் பதஞ் சலி நிறுவனம் தனது வணி கத்தில் கடும் சரிவை எதிர் கொண்ட நிலையில், தனது வணிகத்தை மேம்படுத்த அலோபதி (ஆங்கில மருத்து வம்) மருத்துவம் கூட தீர்க்க முடியாத தீராத நோய்களை தங்களது பதஞ்சலி மூலிகை மருந்து பொருட்கள் தீர்ப்ப தாக விளம்பரங்களை வெளி யிட்டது பதஞ்சலி நிறுவனம்.

இதற்கு எதிர்ப்பு தெரி வித்த இந்திய மருத்துவ சங்  கம் (ஐஎம்ஓ) உச்சநீதிமன்றத்  தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தொடர்பாக பதஞ்  சலி நிறுவனத்துக்கு 2 முறை உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. 

இந்நிலையில், தடுப்பூசி மற்றும் சமகால மருத்துவ நடைமுறைகளுக்கு எதிராக பாபா ராம்தேவ் அவதூறு பிரச்சாரம் செய்வதாக குற்  றம்சாட்டி இந்திய மருத்துவ  சங்கம் (ஐஎம்ஏ) சார்பில் தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் செவ்வா யன்று மீண்டும் விசார ணைக்கு வந்தது. உச்சநீதி மன்றத்தில் நீதிபதிகள் ஹிமா கோலி, அமானுல்லாஹ் ஆகி யோர் அடங்கிய அமர்வு இந்த  வழக்கை விசாரித்தது. “கடந்த  முறை அனுப்பப்பட்ட நோட்டீ சுக்கு பாபா ராம்தேவ் தரப்பு இன்னும் பதிலளிக்கவில்லை என்றும், விசாரணைக்கு ஒரு நாள் முன்னதாகத்தான் பதில்  மனு தாக்கல் செய்தது” என் றும் சுட்டிக்காட்டப்பட்டது. 

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள்,”பாபா ராம்தேவ் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக் கூடாது” எனவும் கேள்விகள் எழுப்பி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையின் போது பதஞ்சலி நிறுவனத்தின் பாபா ராம்தேவ், நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பால கிருஷ்ணா இருவரும் கட்டா யம் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதிகள் காட்ட மான உத்தரவையும் பிறப்பித்  துள்ளனர்.