india

img

இந்தியா கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்வு!

புதுதில்லி, ஜன. 13 - அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ‘இந்தியா’ கூட்டணியின் தலைவ ராக, ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். 28 கட்சிகளை உள்ளடக்கிய ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்களின் கூட்டம் காணொலி முறையில் சனிக் கிழமையன்று நடைபெற்றது.

இதில், காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, ராஷ்ட்ரிய ஜனதாதளம், ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 14 பிரதானக் கட்சி களின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், இந்தியா கூட்டணியின் தலைவராக மல்லி கார்ஜூன கார்கே ஒருமனதாக தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார். கூட்டத்தில் கூட்டணியின் தலைவர் பதவிக்கு கார்கே மட்டுமல்லாமல், பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதளம் தலைவருமான நிதிஷ் குமாரின் பெயரும் முன்மொழியப்பட்டது.  எனினும், இந்தியா கூட்டணியின் தலைமை, காங்கிரசிடமே இருக்க வேண்டும் என்று நிதிஷ்குமார் விரும்பி யதாக ஜேடியு-வின் மற்றொரு ராஜீவ் ரஞ்சன் சிங் லாலன் விளக்கினார்.

அதேபோல, ஜார்க்கண்ட் முதல்வரும்,  ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரன், ராகுல் காந்தியின் பெயரைப் பரிந்து ரைத்தார். ஆனால், பாரத் நீதிப் பய ணம் மேற்கொள்ள உள்ளதை சுட்டிக் காட்டி மறுத்து விட்டார். இதை யடுத்தே கார்கே-வே ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

கூட்டத்தில், தலைவர் தேர்வு மட்டுமன்றி, இந்தியா கூட்டணியின் பல்வேறு அம்சங்கள் மற்றும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ள மக்க ளவைத் தேர்தலுக்கான தயாரிப்புகள் குறித்தும் தலைவர்கள் விவாதித்தனர்.  காங்கிரஸ் தலைவர்கள் மல்லி கார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், கனிமொழி கருணா நிதி எம்.பி. உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். திரிணாமுல் தலை வர் மம்தா பானர்ஜி, சிவசேனா தலை வர் உத்தவ் தாக்கரே ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்வில்லை.

எனினும், கடந்த கூட்டத்தில், பிரதமர் பத விக்கு மல்லிகார்ஜூன கார்கே-வின் பெயரை முன்மொழிந்தவர்களே மம்தா  பானர்ஜியும், ஆம் ஆத்மி தலை வரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலும்தான் என்பது குறிப்பிடத் தக்கது. மேலும், “காணொலி வழியான கூட்டத்தில் தாங்கள் பங்கேற்காததால், எதிர்வரும் கூட்டங்களிலும் நாங்கள் கலந்து கொள்ள மாட்டோம் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளவேண்டாம்; கட்சியின் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி ஏற்கெனவே ஒரு  திட்டமிடப்பட்ட நிகழ்வில் பங்கேற்ப தால், இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை” என்று திரிணாமுல் காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.