india

img

யூதர்களுக்கு இஸ்ரேல்... இந்துக்களுக்கு இந்தியாவா?

பாகிஸ்தானில் இந்துக்களை விட, அகமதியா இஸ்லாமி யர்கள் தான் கொடூரமான அச்சுறுத்த லுக்கு ஆளாகியிருக்கும் மதச் சிறு பான்மையினர். பர்மிய இராணுவம் ரோஹிங்யா இசுலாமியர்கள் மீது  இனப் படுகொலை நடத்தியிருப்பது  உலகெங்கிலுமே அம்பலமாகியி ருக்கிறது. ஈழத் தமிழர்கள் சிங்கள  பேரினவாதத்தால் இனப் படு கொலைக்கு ஆளாகியுள்ளனர்.

இவர்களையெல்லாம் ஒதுக்கி விட்டு அமல்படுத்தப்பட்டிருக்கும் குடி யுரிமைச் சட்டத் திருத்தம் யூதர்  களுக்கு இசுரேல் போல, இந்துக் களுக்கு இந்தியா என்பதை உரு வாக்கும் நோக்கத்தைக் கொண்டி ருக்கிறது. 

“இந்துக்கள் அல்லாதவர்கள், எந்தவொரு உரிமையினையும் சலு கையினையும் கோராமல், இந்து தேசத்திற்குக் கீழ்ப்படிந்து இந்த நாட்டில் வாழலாம்” என ஆர்.எஸ்.எஸ்.- சித்தாந்த குரு கோல்வால்கர் கூறியிருப்பதற்கு ஏற்ப, இந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியிருக்கிறது பாசிச பாஜக அரசு.

இதனை முறியடிக்க வேண்டிய பொறுப்பு, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கும், அரசியல் அமைப்புகளுக்கும் உள்ளது.

தி.வேல்முருகன் எம்எல்ஏ, தலைவர், தமிழக 
வாழ்வுரிமைக் கட்சி