india

img

பாஜகவின் மெகா ஊழலுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சியின் அடுத்த வழக்கும் மாபெரும் வெற்றி

புதுதில்லி, மார்ச் 11 - அநாமதேய தேர்தல் பத்திரங் கள் விற்பனை தொடர்பான தரவு களை வழங்க ஜூன் 30 வரை அவ காசம் வழங்க வேண்டும் என்று ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ (SBI) தாக்கல் செய்த மனுவை, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட் தலைமையிலான அமர்வு அதி ரடியாக தள்ளுபடி செய்துள்ளது.

மேலும், இந்த வழக்கில் கால  அவகாசம் எதுவும் வழங்க முடி யாது என்று கூறிவிட்ட நீதிபதிகள் மார்ச் 12 செவ்வாய்க்கிழமை (இன்று) வங்கி அலுவலக நேரம் நிறைவடைவதற்குள் தேர்தல் பத்திர விற்பனை விவரங்களைத் தாக்கல் செய்தாக வேண்டும்; அவ் வாறு இல்லாதபட்சத்தில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற் கொள்ள நேரிடும் என்றும் எஸ்பிஐ வங்கியை நீதிபதிகள் கடுமை யாக எச்சரித்துள்ளனர்.

உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரங்கள் திட்டம் சட்டவிரோதம் என்று கடந்த பிப்ர வரி 15 அன்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையி லான உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, தீர்ப்பளித்தது. அரசியலமைப்பின் பிரிவு 19(1)(a)-வுக்கு எதிராக, நிறுவனங்கள் சட்டம் 182(1), வருமான வரிச் சட்டம் பிரிவு 13A(b), மக்கள் பிரதி நிதித்துவச் சட்டம் பிரிவு 29C- ஆகியவற்றில் ஒன்றிய பாஜக அரசு செய்திருந்த திருத்தங் களையும் ரத்து செய்தது. அத்து டன், தேர்தல் பத்திரம் (Electoral Bonds) விநியோகிப்பதை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வங்கி  உடனே நிறுத்த வேண்டும்; 2019 ஏப்ரல் 12 அன்று உச்சநீதிமன்றத் தின் இடைக்கால உத்தரவுக்குப் பிறகு வாங்கப்பட்ட அனைத்துப் பத்திரங்களின் விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் மார்ச்  6-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்; அந்த விவரங்கள் தேர் தல் ஆணையத்தின் அதிகாரப் பூர்வ இணையதளத்தில் மார்ச்  13-க்குள் பதிவேற்றம் செய்யப் பட வேண்டும்; பணமாக மாற்றப் படாத தேர்தல் பத்திரங்கள் உடனடி யாக உரிய நிறுவனங்களிடமே திரு ப்பி அளிக்கப்பட வேண்டும்” என் றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டி ருந்தது.

தீர்ப்பை மதிக்காத எஸ்பிஐ
ஆனால், 20 நாட்கள் கழித்து,  மார்ச் 4 அன்று உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்த எஸ்பிஐ வங்கி, தேர்தல் பத்தி ரங்கள் விற்பனை தொடர்பான தரவுகளை வழங்க ஜூன் 30 வரை அவகாசம் வழங்க வேண்டும் என திடீர் கோரிக்கை ஒன்றைவைத்தது. 

இதற்கிடையே உச்சநீதிமன் றம் வழங்கிய காலக்கெடுவுக்குள் தேர்தல் பத்திர தரவுகளை வழங் காத எஸ்பிஐ வங்கி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனநாயக சீர் திருத்தங்களுக்கான சங்கம் (ADR), காமன் காஸ் (Common Cause) ஆகியவை நீதிமன்ற அவ மதிப்பு வழக்கு தொடர்ந்தன.

இந்த மனுக்கள் திங்களன்று (மார்ச் 11) காலை 10.30 மணிக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட் மற்றும் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர். கவாய், ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகி யோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

26 நாட்களாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?
மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், வழக்கறி ஞர் பிரசாந்த் பூஷன், ஷதன் பரா சத் ஆகியோர் ஆஜராகினர். அரசுத் தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆகியோர் ஆஜ ராகியிருந்தனர். 

அப்போது, “தேர்தல் பத்திர நன்கொடை தகவல்களை வெளி யிட உத்தரவிட்டு 26 நாட்களாகி விட்டது. இந்த 26 நாட்களாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள். மிக எளிதாக திரட்டக்கூடிய தேர்தல் பத்திர நன்கொடை தகவல்களை தருவதற்கு அவகாசம் கேட்பது ஏன்?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு “எங்கள் கோர் பேங்க்கிங் அமைப்பில், வாங்குபவரின் பெயர் மற்றும் பத்திர  எண் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்ப தற்காக செய்யப்பட்டது. எனவே, தகவலை தொகுக்க நடவடிக்கை  எடுத்திருக்கிறோம், முழு  செயல்முறையையும் நாங்கள் மாற்றி யமைக்க கால அவகாசம்வேண்டும்” என்று மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே தெரிவித்தார்.

மேலும், “எஸ்பிஐ-யிடம் தேர்தல் பத்தி ரங்களை வாங்கியவர்களின் விவரங்கள் உள்ளன. ஆனால், அந்த நன்கொடையைப் பெற்றவர்களின் பத்திர எண்களுடன் பொருத்திப் பார்ப்பதில் சிரமம் உள்ளது.  சில தகவல்கள் டிஜிட்டல் முறையில்  இல்லா மல், மேனுவலாக வைக்கப்பட்டுள்ளதே அதற்கு காரணம்” என்றும் ஹரீஷ் சால்வே குறிப்பிட்டார்.

சிரமப்படுவதற்கு ஒன்றுமே இல்லை
அப்போது, “நாடு முழுவதும் பல வங்கிக் கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டாலும் அதன் அனைத்து விவரங்களும் மும்பையில் உள்ள எஸ்பிஐ மத்திய வங்கிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. இவ்வாறு அனைத்தும் ஒரே இடத்தில் இருக்கும் நிலையில், தேர்தல் பத்திரங்களை வெளியிடு வது தொடர்பாக மிக எளிமையான ஒரு உத்தர வைத் தான் எஸ்பிஐ வங்கிக்கு கொடுத் தோம்” என்று கூறிய நீதிபதிகள், “தேர்தல் பத்திரங்களை வாங்கிய தேதி, அவற்றை வாங்கிய நிறுவனங்களின் பெயர்கள், பத்திரத்தின் மதிப்பு, மறுபுறம் பத்திரத்தை வாங்கிய கட்சிகளின் பெயர் மற்றும் பத்திரத்தின் மதிப்பு, அதைப் பணமாக்கிய தேதி ஆகியவற்றை வெளியிட வேண்டும் என்றே நாங்கள் கூறினோம். எந்த கட்சிக்கு எந்த நிறுவனத்திடம் இருந்து பணம் சென்றது என்பதை காட்ட வேண்டு மானால், கூடுதல் அவகாசம் எடுக்கும் என்ப தால் தான், அதனைக் கூறவில்லை. வழங்கிய வழிமுறைகளைப் பார்த்தாலே அது தெரியும்” என்பதைச் சுட்டிக்காட்டினர்.

மூடிய உறையைத் திறந்து தகவல்களை அளித்து விடலாம்
மேலும், “24-க்கும் குறைவான அரசியல் கட்சிகள்தான் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்றுள்ளன என்பதால், இந்த தகவல்களை எளிதாக திரட்ட முடியும். இதில், நாட்டின் நம்பர் ஒன் வங்கியான எஸ்பிஐ வங்கிக்கு என்ன சிரமம் இருக்கப் போகிறது? எஸ்பிஐ கூற்றின்படியே, தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்களின் விவரங்கள் அனைத்தும் பிரதான கிளை யில் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி பார்த்தால், முத்திரையிடப்பட்ட உறையைத் திறந்து விவரங்களை வழங்கி விடலாமே! 

எனவே, எஸ்பிஐ வங்கியால் செய்ய முடியாத வேலையை ஏதும் நாங்கள் கொடுக்கவில்லை. ஏற்கனவே நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலையைத்தான் வழங்கி இருக்கிறோம். அவ்வாறிருக்க, சரியாக அவகாசம் முடியும் 2 நாட்களுக்கு முன் வீம்பு பிடிக்கும் வகையில் புதிய மனுவைத் தாக்கல் செய்தது ஏன்?” என்று கேள்வி எழுப்பினர்.

இன்று மாலைக்குள் வெளியிட்டாக வேண்டும்
அதைத்தொடர்ந்து, “தேர்தல் பத்திரம் தொடர்பான தரவுகளை வழங்குவதற்கு ஜூன் 30 வரை கால நீட்டிப்பு கோரிய எஸ்பிஐ வங்கியின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது; 2024 மார்ச் 12 அன்று வணிக நேரத்தின் இறுதிக்குள் தேர்தல் பத்திர விவரங்களை வெளியிடுமாறு ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிடுகிறோம்; இந்திய தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை, அந்தத் தகவலைத் தொகுத்து, மார்ச் 15 மாலை 5 மணிக்குள் தமது இணையதளத்தில் வெளியிட்டாக வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தனர்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குர் மீது தற்போதைக்கு நீதிமன்ற அவமதிப்பு அதி கார வரம்பை பயன்படுத்த விரும்பவில்லை என்றாலும், உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவிற்கு இணங்கவில்லை என்றால், வேண்டுமென்றே கீழ்ப்படியாமைக் காக பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.