india

தமிழ்நாட்டில் 69.72 சதவீதம் வாக்குப்பதிவு

சென்னை, ஏப்.21- தமிழ்நாட்டில் 69.72 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக இறுதி வாக்கு சதவிகித பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் 18 ஆவது நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 அன்று தொடங்கியது.  தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.  ஒரு சில தொகுதிகளில் மட்டும் கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை விட சற்றே அதிகம் இருந்தது. 

தமிழ்நாட்டின் மொத்த வாக்கு சதவிகிதம் குறித்த அறிவிப்பு வாக்குப் பதிவு நடைபெற்ற அன்றைய தினம் இரவு 7 மணிக்கு மாநில தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட அறிவிப்பில் 72.09 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவின் முழு விபரங்களை நள்ளிரவு 12 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி 69.46 விழுக்காடு வாக்குகள் பதிவானதாக தரவுகளை  அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதன்படி 10 விழுக்காடு அளவுக்கு வித்தியாசம் இருந்ததால் ஏன் இந்த குளறுபடி எனவும் அரசியல் கட்சிகள் கேள்விகள் எழுப்பினர்.

இந்த நிலையில், ஏப்ரல் 20ஆம் தேதி இரவு 7 மணிக்கு மீண்டும் வெளியிடப்பட்ட இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தேச அட்டவணையில் 69.46 விழுக்காடு வாக்குகள் பதிவானதாக தெரிவித்தது. மேலும் இதில் சற்று உயர்வு இருக்கலாம் என்றும் இறுதி பட்டியல் பின்னர் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி ஏப்ரல் 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் பதிவான வாக்கு சதவிகிதம் குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள் ளது. அதில் தமிழ்நாட்டில் 69.72 விழுக்காடு வாக்குகள் பதிவானதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்த பட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள் ளன. கடந்த முறை பதிவான வாக்குகளை விட ஒட்டுமொத்த சென்னையில் வாக்கு பதிவானது குறைந்துள்ளது.

விளவங்கோடு இடைத்தேர்தல்
கன்னியாகுமரி மாவட்டம், விளவங் கோடு சட்டப்பேரவை  காங்கிரஸ் எம்.எல்.ஏ. வாக  இருந்த விஜய தாரணி, பாஜகவில் இணைந்து, பதவியை ராஜினாமா செய்தார். இதனால், மக்களவைத் தேர்தலுடன் இத்தொகுதியில் இடைத்தேர்தல் நடை பெற்றது.

காங்கிரஸ்  வேட்பாளர் தாரகை கத்பர்ட், பாஜக  நந்தினி, அதிமுக ராணி உட்பட 10 பேர் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் மொத்தம் 2,37,741 வாக்காளர்கள் உள்ள னர். இவர்களில் 1,55,412 பேர் மட்டுமே வாக்க ளித்தனர். இது 65.37 சதவீதம் ஆகும்.

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் 66.90 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருந்தன. தற்போது 1.5 விழுக்காடு வாக்குகள் குறைந்துள்ளன.

தாமதம் ஏன்?
தமிழகத்தில் வாக்கு சதவீதம் இறுதி செய்வதில் தாமதம் ஏன்? என்பது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அளித்த விளக்கம் வருமாறு:-

“ஒரு சில பகுதிகளில் இரவு 7 மணிக்குள் வாக்குப்பதிவு முடிவடைந்தது. ஒரு சில இடங்களில் முடியவில்லை. அப்போதைய நிலவரப்படி கிடைத்த உத்தேச தகவல்களை முதலில் வெளியிட்டோம். அதன்படி 72.09 விழுக்காடு வாக்குகள் என்று தெரிவித்தோம்.

“ஒரு சில பகுதிகளில் இரவு 7 மணிக்குள் வாக்குப்பதிவு முடிவடைந்தது. ஒரு சில இடங்களில் முடியவில்லை. அப்போதைய நிலவரப்படி கிடைத்த உத்தேச தகவல்களை முதலில் வெளியிட்டோம். அதன்படி 72.09 விழுக்காடு வாக்குகள் என்று தெரிவித்தோம்.

ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் பதி வான வாக்குகள் இப்போது கணினியில் பதி வேற்றம் செய்யப்பட்டு வருகிறது. வாக்குச் சாவடி வாரியாக வாக்குப் பதிவு விவரங்களை பதிவேற்றம் செய்ய நேரமாகும். எனவே, தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்குப்பதிவு சதவீதத்தில் (69.46 சதவீத வாக்குகள்) இருந்து இறுதி வாக்குப் பதிவு என்பது சிறிய அளவில் மாறுபட்டு இருக்கலாம். அதேசமயம் இப்போதைய வாக்குப்பதிவு சதவீதத்தில் பெரிய அளவுக்கு மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை. மேலும், மறு தேர்தல் எங்கும் நடத்த தேவையில்லை என்று  தேர்தல் நடத்திய அதிகாரிகள் தெரிவித்துள்  ளனர். இவ்வாறு அவர் கூறினார்.