india

img

தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக சச்சின் டெண்டுல்கர் நியமனம்!

தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் விளம்பரங்கள் மற்றும் பரப்புரைகளை மேற்கொள்ள சச்சின் டெண்டுல்கர் தேசிய அடையாளமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சச்சின் டெண்டுல்கர் இடையே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை கையெழுத்து ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.