india

ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்த மோடி அரசு

கடந்த 4 ஆண்டுகளில் நாடாளுமன்ற கூட்டத் தொடர்களில் கேள்வி நேரத்தை குறைக்கும் வேலையில் ஒன்றிய மோடி அரசு படுதீவிரமாக ஈடுபட்டுள்ளது.

ஜனநாயகம் சிறந்த முறையில் செயல்பட வேண்டுமானால், நாடா ளுமன்ற, சட்டமன்ற அமைப்பு களில் கேள்வி நேரம் என்பது முக்கி யமான பங்கு வகிக்கிறது. கேள்வி  நேரம் மூலம் தான் எதிர்க்கட்சிகள், ஆளும் கட்சியை முக்கியமான விஷயங்களில் கேள்விகள் கேட்க  முடியும். ஆனால் நாடாளுமன்றத் தில் கடந்த 2019-இல் துவங்கி 2023 தற்போது வரை கேள்வி நேரம் தொடர்ந்து குறைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

கடந்த ஐந்து வருடங்களில் 2023 பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜன வரி 31 முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி  வரை மிக மோசமாக கேள்வி நேரம்  முடக்கப்பட்டது. அதாவது மக்க ளவையில் 19 சதவீதம், மாநிலங்க ளவையில் வெறும் 9 சதவீதம் மட்  டுமே கேள்வி நேரத்திற்காக ஒதுக்  கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாடா ளுமன்ற கூட்டத்திலும் ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் கேள்வி  நேரமாக ஒதுக்கப்படும். அதன்  மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் கள் நேரடியாக அமைச்சர்களை கேள்வி கேட்க முடியும்.

ஆனால் கடந்த 2023 மழைக்கால கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்திற்காக ஒதுக்கப்  பட்டது 16.6 சதவீதம், மாநிலங்கள வையில் 28.3 சதவீதம் மட்டுமே. குளிர்கால கூட்டத் தொடரை  ஒப்பிட்டால் இது சற்று பரவா யில்லை. நாடாளுமன்ற கூட்டத் தொடரின் இரண்டாவது வாரத்தில்  முன் எப்போதும் இல்லாத அள விற்கு பாதுகாப்பு விதிமுறை மீறல்  ஏற்பட்டதும், பிறகு போராட்டங் கள், அதைதொடர்ந்து நாடாளு மன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் போன்ற பிரச்சனைகளால் கேள்வி நேரம் பாதிக்கப்பட்டது

. அதாவது இந்த வருடம் நடைபெற்ற கடை சித் கூட்டத்தொடர் மிக மோசமான முறையில் இருந்தது. நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடப்பதற்காக ஒதுக்கப்பட்ட நேரத்  தில் 2019 இல் இரண்டு அவைகளி லும் பட்ஜெட் மற்றும் குளிர்கால  கூட்டத் தொடருக்காக ஒதுக்கப் பட்ட மொத்த நேரத்தில் 60% மேல் பயன்படுத்தப்பட்டது. பட்ஜெட் கூட்  டத் தொடரில் 95% கேள்வி நேரத்திற்  காக மக்களவையில் ஒதுக்கப்பட்  டது.

அதன் பிறகு கேள்வி நேரத்திற்  கான நேரம் படிப்படியாக குறைக் கப்பட்டது. ஏற்கனவே 2009 முதல் 2014 வரை  15-ஆவது மக்களவையிலும் கேள்வி நேரம், பாஜகவினரின் கடும்  அமளி உள்ளிட்ட காரணங்களால் பாதிக்கப்பட்டது. 2010 குளிர்கால கூட்டத் தொடர்,  2012 மழைக்கால கூட்டத் தொடரில்  மிகப்பெரிய பாதிப்பு இருந்தது. கேள்வி நேரம் மக்களவையில் வெறும் 5%  மட்டுமே, மாநிலங்கள வையில் கேள்வி நேரமே இல்லை என்கிற நிலையும் இருந்தது. 2012 மழைக்கால கூட்டத்தொட ரில் மக்களவையில் 5%, மாநிலங்க ளவையில் 4% மட்டுமே கேள்வி நேரத்துக்காக ஒதுக்கப்பட்டது.

ஏனென்றால் நிலக்கரி ஒதுக்கீடு சம்  பந்தமாக சிஏஜி அறிக்கை கார ணமாய் அமைந்தது. “கேள்வி நேரம் குறைக்கப்படு வது என்பது தனிப்பட்ட விஷயம் அல்ல. அது ஜனநாயகத்தின் மீது  தொடுக்கப்படும் மிகப்பெரிய தாக்குதலாகும். ஜனநாயகத்தின் அடிப்படையே விவாதங்கள் தான்” என்று நாடாளுமன்ற உறுப்பி னர்கள் ஜோதிமணி சென்னிமலை தெரிவிக்கிறார்.

மேலும்  கேள்வி களும் வடிகட்டப்படுகிறது, அர சாங்கத்திற்கு தேவை என்கிற  கேள்விகள் மட்டுமே விவாதத்  திற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது என்கிறார் அவர்.