நீர்வழிப் படூஉம் நாவலுக்காக எழுத்தாளர் தேவி பாரதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல்வேறு மொழிகளில் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியல் இன்று டெல்லியில் வெளியிடப்பட்டது. அந்த பட்டியலில், நீர்வழிப் படூஉம் என்ற தமிழ் நாவலுக்காக எழுத்தாளர் தேவி பாரதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு மார்ச் 12-ஆம் தேதி தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழவில் விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.