மகாராஷ்டிராவில் மிரட்டும் தோல்வி பயம்
சலுகைகளை அள்ளி வீசும் பாஜக கூட்டணி அரசு
மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலைப் போல சட்டமன்ற தேர்தலி லும் பாஜக கூட்டணி தோல்வியை சந்தி த்து ஆட்சியை இழக்கும் என தகவல் வெளியாகி வருகிறது. இதனால் தோல்வி பயத்தில் உள்ள மகாராஷ்டிரா பாஜக கூட்டணி அரசு தேர்தலுக்கு முன்பே, அரசு தொடர்பான அறிவிப்பு மூலம் பிரச்சா ரத்தை தொடங்கியுள்ளது. கடந்த வாரம் மகாராஷ்டிரா பாஜக கூட்டணி அரசின் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே,மதரஸா ஆசிரியர்களின் சம்பளத்தை மூன்று மடங்காக உயர்த்துவதாகவும், சிறு பான்மையினரின் உதவித்தொகை யையும் உயர்த்துவதாகவும் அறிவித்துள் ளார். தொடர்ந்து திங்களன்று மும்பை நகருக்குள் உள்நுழையும் சாலைகளில் அமைந்துள்ள 5 சுங்கச்சாவடிகளில் கார், ஜீப், வேன் உள்ளிட்ட அனைத்து இலகு ரக வாகனங்களுக்கும் சுங்கக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு என முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு வெளியிட்டார். தோல்வி பயத்தால் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே சலுகை களை பாஜக கூட்டணி அரசு அள்ளி வீசுவதாக “இந்தியா” கூட்டணிக் கட்சி கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மணிப்பூர் பாஜக எம்எல்ஏக்கள் தில்லியில் முகாம்
பாஜகவின் இழிவான அரசிய லால் கடந்த ஒன்றரை வருட காலமாக மணிப்பூர் மாநிலம் வன்முறையால் பற்றி எரிந்து வருகிறது. குக்கி - மெய்டெய் இனத்தவரிடையே நடந்து வரும் இந்த வன்முறைக்கு இது வரை 230க்கும் மேற்பட்டோர் பலியாகி யுள்ளனர். பல லட்சம் மக்கள் சொந்த மாநி லத்திலேயே அகதிகளாக வாழ்ந்து வரு கின்றனர். மாநிலத்தின் இயல்பு நிலை மிக மோசமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மணிப்பூரில் வன்முறை வெடித்த பிறகு முதன்முறையாக மெய்டெய், குக்கி மற்றும் நாகா சமூகங்க ளைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏக்கள் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க தில்லியில் முகாமிட்டுள் ளனர். ஆனால் மொத்தம் எத்தனை எம்எல்ஏக்கள் தில்லிக்கு வந்துள்ளனர் என்பது குறித்து தெளிவாக எந்த தகவ லும் வெளியாகவில்லை. மணிப்பூரில் வன்முறையை முடிவுக்கு கொண்டு வரவே அவர்கள் தில்லிக்கு வந்துள்ள தாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேரளத்தில் 30,000 வங்கிக் கணக்குகள், செல்பேசிகள் முடக்கம்
கேரள சட்டமன்றத்தில் அன்வர் சாதத் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் பினராயி விஜயன் அளித்த பதிலில்,”இணைய நிதி மோசடிகளைத் தடுக்க விரிவான இணைய பாதுகாப்பான “ஃபின் ஈகோ சிஸ்டம்” உறுதி செய்யப்பட வேண்டும். இதற்கு ஒன்றிய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் கூட்டுத் தலையீடு கோரப் பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியால் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதி கரித்து வருகின்றன. இதுபோன்ற குற்றங்களை திறம்பட தடுக்க சைபர் போலீஸ் பிரிவு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனுடன் அனைத்து மாவட் டங்களிலும் சைபர் காவல் நிலையங்க ளும் செயல்படுகின்றன. பொதுமக்கள் புகார்களை பதிவு செய்ய 24 மணி நேர கட்டணமில்லா எண் 1930 மற்றும் www.cybercrime.gov.in என்ற இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற மோசடியில் ஈடுபட்ட 30,000க்கும் மேற்பட்ட வங்கிக் கணக் குகள் ஏற்கனவே முடக்கப்பட்டு சட்ட நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மோசடி யில் ஈடுபட்ட செல்பேசிகளை செயலி ழக்கச் செய்து குற்றவாளிகளை கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அவர் கூறினார்.
ஆம்புலன்சில் தேர்தல் பிரச்சாரம் சுரேஷ் கோபியிடம் விசாரணை
கேரளத்தின் புகழ்பெற்ற திருச் சூர் பூரம் திருவிழாவின்போது ஆம்புலன்ஸ் வாகனத்தை தனது தேர்தல் பிரச்சாரத்துக்காக பயன் படுத்திய குற்றச்சாட்டில் ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ் கோபியிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
சிபிஐ திருச்சூர் தொகுதி செயலாளர் சுமேஷ் அளித்த புகாரின் பேரில் திருச் சூர் நகர காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தனர். இதே விவகாரத்தில் சுரேஷ் கோபியிடம் மோட்டார் வாகனத் துறையும் விசாரணை நடத்தி வருகிறது. அமலாக்கத்துறை அதிகாரியிடம் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு போக்குவரத்து ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.
நோயாளிகளை ஏற்றிச் செல்வ தற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டிய ஆம்புலன்சை சுரேஷ் கோபி தேர்தல் பிரச்சாரத்துக்கு சட்டவிரோதமாக பயன் படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, ஆம்பு லன்ஸ் என்பது நோயாளிகளின் போக்கு வரத்திற்காகவே உள்ளது. தனியார் பயணத்திற்கு பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.திருச்சூர் பூரத்தில் ஏற்பட்ட குழப்பத்திற்குப் பிறகு, பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி சேவா பாரதியின் ஆம்புலன்ஸில் திரு வம்பாடி தேவசம் அலுவலகம் வரும் காட்சிகள் ஏற்கனவே வெளியாகின.