india

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சமையல் எண்ணெய் இறக்குமதி சரிவு

புதுதில்லி, ஆக. 16 - கடந்த நவம்பா் முதல் ஜூலை வரையிலான 2023-24-ஆம் எண்ணெய் சந்தைப்படுத்தல் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் நாட்டின் சமையல் எண் ணெய் இறக்குமதி 1,19,35,227 டன்னாக குறைந் துள்ளது. முந்தைய 2022-23-ஆம் சந்தைப்படுத்தல் ஆண் டின் இதே காலகட்டத்தில் இந்த அளவு 1,21,22,711 டன் னாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி 1.5 சதவிகிதம் குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில் சமை யல் அல்லாத எண்ணெய் வகைகளின் இறக்குமதி 1,32,242 டன்னிலிருந்து 1,88, 955 டன்னாக அதிகரித்துள்ளது.

பாவாணர் கொள்ளுப்  பேத்திக்கு அரசுப் பணி

சென்னை, ஆக. 16- ‘திராவிட மொழி ஞாயிறு’ எனப் போற்றப்படும் தேவநேயப் பாவாணரின் கொள்ளுப் பேத்தி மனோ சாந்திக்கு கருணை அடிப்படையிலான அரசுப் பணி வழங்கி  முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மனோ  சாந்தியின் விண்ணப்பத்தை ஏற்று, அவருக்கு மதுரை  மாவட்டத்திலுள்ள மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்  மணிமண்டபத்தில் அலுவலக உதவியாளர் பணியை ஒதுக்கியுள்ளார். தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பணி நியமன ஆணையை வழங்கினார்.

வானிலையை அறியும் ரேடாருக்கு டெண்டர்

சென்னை, ஆக.16- வானிலையை அறிய ரூ. 50 கோடி மதிப்பீட்டில் 2 சி-பேண்ட் டாப்ளர் ரேடார் வாங்க தமிழ்நாடு அரசு  டெண்டர் கோரியுள்ளது. வானிலை முன்னறிவிப்பை வலுப் படுத்துவதற்காக மாநில பேரிடர் மேலாண்மைத்துறை 2 ரேடார்களை வாங்குகிறது. வானிலை முன்னறிவிப்பை வலுப்படுத்த இராமநாதபுரம், ஏற்காடு ஆகிய இடங்களில் ரேடார்களை பொருத்தத் திட்டமிட்டுள்ளது.