india

img

17 கட்சிகள் பங்கேற்ற கூட்டத்தில் முடிவு ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி பொது வேட்பாளர்!

புதுதில்லி, ஜூன் 15 - குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவதென 17 கட்சித் தலைவர்கள் கலந்துகொண்ட எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முடி வெடுக்கப்பட்டு உள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கூட்டத் திற்கு, மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலை வருமான அழைப்பு விடுத்திருந்தார்.  அதன்படி தில்லி கான்ஸ்டிடி யூசன் கிளப்பில் புதனன்று பிற்பகல் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர் கள் மல்லிகார்ஜூனா கார்கே, ஜெய் ராம் ரமேஷ், ரன்தீப் சுர்ஜேவாலா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்  எளமரம் கரீம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பினோய் விஸ்வம்,  திமுக சார்பில் மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, சிவசேனா சார்பில் பிரியங்கா சதுர்வேதி எம்.பி., சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ், மதச்சார்பற்ற ஜனதா தள  தலைவர் குமாரசாமி, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். மொத்தம் 22 கட்சி களுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்திருந்த நிலையில் 17 கட்சி களின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆம் ஆத்மி, பிஜூ ஜனதா தளம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி,  சிரோமணி அகாலி தளம், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கூட்டத்தின் முடிவில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

 “இன்று பல கட்சிகள் வந்திருந்தன. இந்தக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பதவிக்கு அனைத்துக் கட்சிகளுக்கும் பொது வான ஒரு வேட்பாளரை தேர்வு செய்ய  முடிவு செய்துள்ளோம். அந்த வேட் பாளருக்கு அனைவரும் தங்கள் ஆதரவை வழங்குவார்கள்.  எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட சரத்பவாரி டம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அந்த கோரிக்கையை சரத்  பவார் மீண்டும் நிராகரித்துவிட்டார். ஆனாலும், பொதுவேட்பாளர் யார் என்பது குறித்து தொடர்ந்து ஆலோ சனை செய்து முடிவெடுப்போம். இதுகுறித்து மற்றவர்களுடனும் கலந்து ஆலோசிப்போம்.  இது ஒரு நல்ல தொடக்கம். பல மாதங்கள் கழித்து நாங்கள் ஆலோசனை நடத்தியுள்ளோம். இதேபோன்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தை நாங்கள் மீண்டும் நடத்துவோம்” என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார். தற்போதைய குடியரசுத் தலை வர் ராம்நாத் கோவிந்த்தின் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடி வடைகிறது. முன்னதாக புதிய குடி யரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற் கான தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் இதற்கான வேட்புமனுத் தாக்கலும் புதன்கிழமை துவங்கியுள்ளது. இந்நிலையில், ஆளும் பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பா ளர் தொடர்பாக இன்னும் முடி வெடுக்கப்படவில்லை. இதுதொடர் பாக ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க் கட்சி கூட்டணியில் ஆதரவை திரட்ட  ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா ஆகி யோர் கொண்ட குழுவை பாஜக அமைத்துள்ளது. இதனிடையேதான் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.