மக்களவை தேர்தல் நெருங்கி யுள்ள சூழலில் மக்களை திசை திருப்பும் நோக்கத்தில் பிரதமர் மோடி சர்வதேச மகளிர் தின சிறப்பு ஆபர் என்ற பெயரில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்படு வதாக அறிவித்துள்ளார். இந்த சிலிண்டர் விலை குறைப்பு தேர்தல் நேர நாடகம் என தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத்) விமர்சித்துள்ளது. இதுகுறித்து தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், எம்பியுமான சுப்ரியா சுலே கூறுகையில்,”9 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த போதெல்லாம் செய்யாமல் தேர் தல் அறிவிக்கப்பட உள்ள நேரத்தில் விலையை குறைப்பது மேலும் ஒரு நாட கம் தான். பிரதமர் மோடியின் இந்த அறி விப்பு எந்த ஆச்சர்யத்தையும் அளிக்க வில்லை. விலை குறைப்பு அறிவிக்கப் பட்டுள்ள நேரத்தை கவனிக்க வேண்டும்” என விமர்சித்துள்ளார்.
இதுபோல காங்கிரஸ் கட்சியின் செய்திதொடர்பாளர் சுரேந்திரா ராஜ் புத், ”ரூ.395 விற்க வேண்டிய சிலிண்டரை ரூ.1000க்கு விற்று கொண்டு ரூ.100 குறைந்திருப்பதாக அறிவித்துள்ளார் பிரதமர் மோடி. இது பெரிய அறிவிப்பு ஒன்றும் கிடையாது” என கூறியுள்ளார்.