india

img

இந்தியா, வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை கண்டித்து சிபிஎம் பேரணி

இந்தியா, வங்கதேசம் ஆகிய இருநாடுகளிலும் நடைபெறும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை கண்டித்து, மேற்கு வங்க மாநிலம் ஜாதவ்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேரணி நடத்தியது. சிபிஎம் மூத்த தலைவர் காந்தி கங்குலி தலைமையில் நடைபெற்ற பேரணியில் மத்தியக் குழு உறுப்பினர் டாக்டர் சுஜன் சக்ரவர்த்தி, கட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் திரளாக பங்கேற்றனர்.