india

img

ஆளுநர் ரவிக்கு கும்பகோணத்தில் சிபிஎம் - சிபிஐ கருப்புக் கொடி

தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு எதிராகவும், தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும் விதமாகவும் நடந்து கொள்ளும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கருப்புக் கொடி காட்டி போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனொரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்திற்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, கும்பகோணம் புறவழிச்சாலையில் சிபிஎம் தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கருப்புக் கொடி காட்டியும் கண்டன முழக்கங்கள் எழுப்பியும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.