india

வெம்பக்கோட்டை அருகே 10 பேர் பலியான துயரம்

சென்னை, பிப்.17-
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து - உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:

விருதுநகர் மாவட்டம் வெம்பக்  கோட்டை அருகே ராமுத்தேவன் பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பெண்கள், 6 ஆண்கள்  என மொத்தம் 10 பேர் உயிரிழந் துள்ளனர், மேலும் 3 பேர் படுகாயம் அடைந்து சிவகாசி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச்செய்தி மிகுந்த அதிர்ச்சி யளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபத்தை யும் ஆறுதலையும் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துக் கொள்கிறது. பட்டாசு ஆலை விபத்திற்கு, மனித தவறே காரணம் என்றும், ரசா யனம் கலக்கும் அறையில் விதியை  மீறி 8 பேர் இருந்ததே விபத்திற்கு  காரணம் என்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள் ளார்.  

எனவே, பாதுகாப்புக் குறை பாடு மற்றும் விதி மீறலுக்கு காரண மானவர்கள் மீது உரிய நட வடிக்கை மேற்கொள்ள வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு தமி ழக அரசை வலியுறுத்துகிறது. வெடி விபத்தில் உயிரிழந்த வர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் மூன்று லட்சம் வழங்கப்  படும் என தமிழக அரசு அறிவித் துள்ளது.

அதை ரூபாய் பத்து லட்ச மாக உயர்த்தி வழங்க வேண்டு மெனவும், அதே போல் காயம டைந்தவர்கள் குடும்பத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் அறிவிக்கப்பட்  டுள்ளதை ரூபாய் இரண்டு லட்ச மாக உயர்த்தி வழங்கிட வேண்டு மெனவும் கேட்டுக்கொள்கிறோம். ஏற்கெனவே, அரசு அனுமதி பெறாமல், பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்காமல் நடைபெறும் அனைத்து பட்டாசு ஆலைகளும் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிப்பதையும், பட்டாசு ஆலைகள் உரிய பாதுகாப்பு அம் சங்களுடன் செயல்படுகிறதா? என்  பதை தொழிற்சாலை ஆய்வா ளர்கள் தொடர்ந்து கண்காணிப்ப தையும் அரசு உறுதி செய்திட வேண்டும்.  

மேலும், இனிமேல் இதுபோன்ற  விபத்துகள் ஏற்படாவண்ணம் தமி ழக அரசு உரிய நடவடிக்கை எடுத்  திட வேண்டுமென இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு தமிழக அரசை வலி யுறுத்துகிறது. இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.