india

img

6 மாதங்களில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி – சீரம் நிறுவனம்  

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசியை இன்னும் 6 மாதங்களில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக சீரம் இன்ஸ்டிட்யூட் தெரிவித்துள்ளது.  

டெல்லி – ஏற்கெனவே நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சம்பந்தமான குழு கூட்டத்தில், 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுமா என்பது குறித்து ஆலோசனை செய்து அறிவிப்பு வெளியிடப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் சிஐஐ மாநாட்டில் சீரம் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி அதார் பூனாவாலா கூறியதாவது, 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இன்னும் 6 மாதங்களில் கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.  

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சிறாருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் 6 மாதங்களில் தடுப்பூசி அறிமுகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது பரிசோதனையில் உள்ள இந்த தடுப்பூசி நல்ல செயல்திறன் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். 

;