india

img

ஜேஎம்எம் கட்சியை உடைக்கும் சதி முறியடிப்பு

“இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜார்க் கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைவர் ஹேமந்த் சோரன், முதல்வராக பதவி வகித்து வந்த போது சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி கடந்த ஜனவரி 31 அன்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஹேமந்த் சோர னை கைது செய்ததன் மூலம் ஜார்க் கண்டில் ஜேஎம்எம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்ற பாஜக கணக்கு போட்டது. ஆனால் கைது செய்யப்படுவதற்கு முன்பே ஹேமந்த் சோரன் முதல்வர் பத வியை ராஜினாமா செய்து, ஜேஎம் எம் மூத்த தலைவரும், ஜார்க்கண்ட் டைகர் என அழைக்கப்படுபவருமான சம்பாய் சோரனிடம் முதல்வர் பத வியை அளித்துச் சென்றார். இத னால் ஹேமந்த் சோரன் கைது மூலம் பாஜக அரங்கேற்ற இருந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதி தவிடுபொடியானது. 

அதன்பின் பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு பிறகு கடந்த ஜூன் மாதம் ஜார்க்கண்ட் உயர்நீதி மன்றம் வழங்கிய ஜாமீன் மூலம் ஹேமந்த் சோரன் சிறையில் இருந்து விடுதலை ஆனார். சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் ஹேமந்த் சோரன் முதல்வராக பொறுப்பேற்ற நிலையில், சம்பாய் சோரன் வழக்கம் போல அமைச்சராக பொறுப்பேற்றார்.

ஜேஎம்எம் கட்சியை உடைக்க சதி

ஹேமந்த் சோரன் கைது மூலம் ஜேஎம்எம் கட்சியை ஒழிக்கும் திட்டம், ஜார்க்கண்ட் ஆட்சி கவிழ்ப்பு என பாஜகவின் சதித் திட்டங்கள் எடுபடாத நிலையில், கடைசியாக ஜேஎம்எம் கட்சியை உடைக்க பாஜக திட்டம் வகுத்தது. அதாவது சட்டமன்ற தேர்தலுக்கு முன் முதல்வர் பதவி பறிக்கப்பட்ட தால் அதிருப்தியில் இருந்த சம்பாய்  சோரன் மூலம் ஜேஎம்எம் கட்சியை  உடைத்தும், அவருக்கு ஆதர வான எம்எல்ஏக்கள் மூலம் ஜார்க் கண்டில் ஆட்சியை கைப்பற்ற பாஜக சதித் திட்டம் தீட்டியது. 

இந்த சதித் திட்டத்திற்கு திரைக் கதை வழங்கும் விதமாக சம்பாய் சோரன் மற்றும் 6 ஜேஎம்எம் எம்எல் ஏக்கள் பாஜகவில் இணைய உள்ள தாக  “கோடி மீடியா” மூலம் பாஜக செய்திகளை வெளியிட்டது. அச் செய்திகளில்,”சம்பாய் சோரன் மற்றும் 6 ஜேஎம்எம் எம்எல்ஏக்கள் மேற்கு வங்க பாஜக தலைவர்களி டம் தொடர்பில் இருப்பதாகவும், விரைவில் அவர்கள் பாஜகவில் இணைய உள்ளனர்” எனவும் செய்திகள் தெரிவித்தன. மேலும் தில்லியில் உள்ள தனது மகளை பார்க்க சம்பாய் சோரன் சென்ற பொழுது, அவர் பாஜகவில் இணையவுள்ளதாக “கோடி மீடியா” ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு ஜேஎம்எம் கட்சிக்குள் கடும் குழப்பத்தை ஏற்படுத்தின. “ஜார்க்கண்ட் டைகர்”என அழைக் கப்படும் பழங்குடியின தலைவர் பாஜகவில் இணையப்போகிறாரா? என இந்திய அரசியலில் சல சலப்பை ஏற்படுத்தின.

சத்தமில்லாமல் சாதித்த ஹேமந்த்சோரன்

சம்பாய் சோரன் மற்றும் 6 ஜேஎம் எம் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய உள்ளதாக வெளிவந்த செய்திகள் தொடர்பாக ஹேமந்த் சோரன் பெரிதாக அலட்டிக் கொள் ளவில்லை. சாதாரண அறிக்கை கூட வெளியிடவில்லை. 6 ஜேஎம்எம் எம்எல்ஏக்கள் வெளியேறினால் ஆட்சி கவிழும் என்று ஊடகங்கள் கூறிய செய்திகள் பற்றி எனக்கு தெரியாது என ஹேமந்த் சோரன் கூறியதாக செய்திகளும் வெளியாகின.

இந்நிலையில், பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்படும் 6 ஜேஎம்எம் எம்எல்ஏக்கள் யாரென்று தெரியவில்லை. ஆனால் அனைத்து ஜேஎம்எம் எம்எல்ஏக்களும் ஒரே முகாமில் இருப்பதாக செவ்வா யன்று  அக்கட்சியின் மூத்த தலைவர் கூறியதாக செய்திகள் வெளியாகின. அடுத்த 12 மணி நேரத்தில், அதாவது புதனன்று மாலை,”நான் பாஜகவில் இணையவில்லை. புதிய கட்சி தொடங்கப் போகிறேன்” என சம்பாய் சோரன் அறிவித்தார். இதன்மூலம் பாஜகவின் கடைசி சதித்திட்டமான ஜேஎம்எம் கட்சியை உடைக்கும் சதியையும் ஹேமந்த் சோரன் சத்த மில்லாமல் தகர்த்துள்ளார்.

சம்பாய் சோரன் - ஹேமந்த் சோரன் என்ன பிரச்சனை?

முதல்வர் பதவி பறிக்கப்பட்ட தால்  சம்பாய் சோரன் அதிருப்தி அடைந்ததாக தகவல் ஏதும் வெளி யாகவில்லை. ஆனால் வரவிருக் கும் சட்டமன்றத் தேர்தலில் காட்ஷிலா தொகுதியில் இருந்து தனது மகனை வேட்பாளராக நிறுத்த வேண்டும் எனும் சம்பாய் சோரனின் கோரிக்கையை மறுத்த தால் கட்சிக்குள் கருத்து வேறுபாடு கள் தோன்றியதாக ஜேஎம்எம் வட் டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த அதிருப்தி காரணமாகவே சம்பாய்  சோரன் புதிய கட்சி தொடங்குகிறார் என கூடுதல் தகவலும் வெளியாகி யுள்ளன.