“இந்தியா” கூட்டணிக்கு மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், தோல்வி பயத் தில் கலக்கமடைந்துள்ள மோடி அரசு மத் திய அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சி களுக்கு நெருக்கடி அளித்து வருகிறது. ஏற்கெனவே அமலாக்கத்துறை மூலம் சம்மன் மற்றும் கைது நடவடிக்கையை மேற்கொண்டு வரும் மோடி அரசு, மக்க ளவை தேர்தலில் சுதந்திரமாக செயல்பட முடியாதபடி வருமான வரித்துறை மூலம் “இந்தியா” கூட்டணி கட்சிகளுக்கு அப ராத நோட்டீஸ் அனுப்பி வருகிறது.
கடந்த மாதம் ரூ.14 லட்சத்திற்கான வரி யை தாமதமாக செலுத்தியதாக கூறி காங்கி ரஸ் கட்சி ரூ.210 கோடி ரூபாய் அபராதம் விதித்து 4 வங்கி கணக்குகளை முடக்கி ரூ.135 கோடியை பறித்தது. இதுதொடர் பாக காங்கிரஸ் தொடர்ந்த வழக்கை நீதி மன்றம் தள்ளுபடி செய்த நிலையில், மார்ச் 29 அன்று கடந்த 5 நிதியாண்டுகளில் சரி யாக வருமான வரி செலுத்தவில்லை என்று கூறி ரூ.1,823 கோடி வரி அப ராத தொகை விதித்தது. அன்றைய தினம் மாலையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ரூ.11 கோடி அபராத நோட்டீஸ் அனுப்பி யது வருமான வரித்துறை.
இந்நிலையில், ரூ.1745 கோடி அபராதம் என காங்கிரஸ் கட்சிக்கு மேலும் ஒரு நோட் டீஸை அனுப்பியுள்ளது வருமான வரித் துறை. 2014-15 முதல் 2016-17 வரை 3 நிதி யாண்டுகளுக்கு ரூ.1,745 கோடி வரி பாக்கி இருப்பதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஒரு மாத இடைவெளி யில் காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித் துறை அனுப்பிய அபராத தொகை ரூ. 3,568 கோடியாக உயர்ந்துள்ளது.