பிரதமர் வருகையின் போது காங்கிரஸ் கருப்புக்கொடி!
இலங்கைச் சிறைகளில் வாடும் தமிழக மீனவர்களை விடு விக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கா ததைக் கண்டித்து, பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரும் பிப்ரவரி 27, 28 தேதிகளில் காங்கிரஸ் போராட்டம் அறி வித்துள்ளது. பிப்ரவரி 27 அன்று காலை 10 மணிக்கு, இராமேஸ்வரம் பாம்பன் கட லில் இறங்கி மனிதச் சங்கிலி போராட் டமும், குலசேகரபட்டினத்திற்கு பிரதமர் மோடி வரும் பிப்ரவரி 28 அன்று குமரி முனையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்ட மும் நடைபெறும் என தமிழ்நாடு காங்கி ரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந் தகை எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
‘பிலிம் பெட்டி’ ஓட்டிய பாஜக அண்ணாமலை
தென்காசி, பிப். 24 - “என் மண், என் மக்கள்’ யாத்திரை யின் ஒரு பகுதியாக சங்கரன்கோவிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, 2019-ஆம் ஆண்டு அளித்த 295 வாக்குறுதி களை பாஜக நிறைவேற்றிவிட்டது” என பிலிம் பெட்டி ஓட்டியுள்ளார்.
மேலும், “2026-இல் தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்கும்” எனப் பேசி சிரிப்புக்காட்டியிருக்கும் அண்ணாமலை. “நாடாளுமன்றத் தேர்தல், 2026-ஆம் ஆண்டு தமிழகத்தில் இரட்டை இன்ஜின் ஆட்சிக்கு அடித்தளமாக இருக்கும்” என்றும் கூறி தனக்குத்தானே மகிழ்ச்சி யடைந்துள்ளார்
இதே கூட்டத்தில் பேசிய திருநெல் வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், “மக்களவைத் தேர்தலில் பாஜக 37 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறுமென்று எந்தக் கூச்சமும் இல்லா மல் பேசி பாஜக தொண்டர்களையே திகிலடிக்க வைத்துள்ளார்.
39 வேட்பாளர்களும் தயார்: ஓபிஎஸ் அணி காமெடி
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பாஜகவுடன் தான் கூட்டணி என்பதை தெளிவுபடுத்திவிட்ட நிலை யில் தங்களது கட்சியில் 39 தொகுதிக ளுக்கும் வேட்பாளர்கள் தயாராக இருப்ப தாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.
பரந்தூர் பசுமை விமான நிலையம்: நிலம் எடுப்பதற்கு அறிவிப்பு வெளியீடு
சென்னை, பிப். 24 - காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும் பூர் வட்டத்தில் உள்ள பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருகிறது. நில எடுப்பு பணிகளுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அனுமதி அளித்து தமிழ் நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதற்கான அலுவலகங்கள் மற்றும் நிதியானது ஒதுக்கீடும் செய்யப்பட்டது.
ஆனால், பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைந்தால், பெருமளவு நீர் ஆதாரங்களும் குடியிருப்புகளும் பாதிக்கும் என்று கூறி 13 கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையிலேயே பொடவூர் கிரா மத்தில் 32.04.05 ஹெக்டேர் மற்றும் 2.77.76 ஹெக்டேர் நிலத்தை எடுப்பதற்கான முதல் நிலை அறிவிப்பை, பரந்தூர் விமான நிலைய திட்டம் தனி மாவட்ட வருவாய் அலுவலர் வெளியிட்டுள்ளார்.
நிலம் கொடுத்த உரிமையாளர்கள் தங்கள் கோரிக்கை மற்றும் ஆட்சே பனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்க லாம் என்றும்; ஆட்சேபணைகள் மீது ஏப்ரல் 4 அன்று நேரடியாக விசாரணை நடைபெறும் என்றும் அந்த அறிவிப்பா ணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயதாரணி ஓட்டம்: காங்கிரஸ் கொண்டாட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் விள வங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி பாஜக-விற்கு ஓட்டம் பிடித் துள்ளார். 10 நாட்களாகவே விஜய தாரணி பாஜக-வில் இணைவார் என தக வல்கள் வெளியான நிலையில், சனிக்கிழ மையன்று அவர் பாஜக-வில் இணைந்துள் ளார். இதையடுத்து விஜயதாரணி கட்சியி லிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், அவர் எம்எல்ஏ-வாக இருப்பதால், கட்சித் தாவல் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை அறிவித் துள்ளார். இதனிடையே, விஜயதாரணி பாஜக-வுக்கு சென்றதை, கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் தொண்டர்கள், இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடியுள்ளனர்.