india

img

தில்லு முல்லு செய்து சண்டிகர் மாநகராட்சியை கைப்பற்றிய பாஜக

பஞ்சாப், ஹரியானா  மாநிலங்களின் தலை நகராகவும், யூனியன்  பிரதேசமாகவும் விளங்கும்  சண்டிகர் நகரத்தின் மேயர்,  மூத்த துணை மேயர், துணை  மேயர் பதவிகளுக்கான வாக்  குப்பதிவு கடந்த ஜனவரி  மாதம் 18-ஆம் தேதி நடை பெறுவதாக இருந்தது.  35 கவுன்சிலர்களைக் கொண்ட சண்டிகர் மாநக ராட்சியில், பாஜகவிற்கு 14  கவுன்சிலர்களும், ஆம்  ஆத்மி கட்சிக்கு 13 கவுன்சிலர் களும், காங்கிரசுக்கு 7  கவுன்சிலர்களும், ஷிரோ மணி அகாலி தளத்துக்கு ஒரு  கவுன்சிலரும், வாக்க ளிக்கும் உரிமையைக் கொண்ட பாஜக எம்பி-யான கிரோன் கெரும் வாக் களிக்கும் நபராக இருந்தார்.

காங்கிரஸ் - ஆம் ஆத்மி  கூட்டணி அமைப்பதாக அறி வித்த நிலையில், 20 வாக்கு களுடன் சண்டிகர் மாநக ராட்சியை “இந்தியா” கூட் டணி கைப்பற்றும் என எதிர்  பார்க்கப்பட்டது.  ஆனால் வாக்களிக்கும் நேரத்தில் ஆம் ஆத்மி - காங்  கிரஸ் கட்சிகளை மாநக ராட்சி அலுவலகத்திற்குள் விடாமல் பாஜகவின் கைப்  பாவையாக இருந்த தேர்தல்  நடத்தும் அதிகாரி போலீசார் மூலம் தடுத்தார்.

இதனால்  ஆம் ஆத்மி - காங்கிரஸ் கட்சி கள் நீதிமன்றத்தில் வழக்கு  தொடர, பஞ்சாப் - ஹரி யானா உயர்நீதிமன்றம் ஜன வரி 30-ஆம் தேதி வாக்குப்  பதிவு நடத்த உத்தரவிட்டது.  பாஜக தில்லு முல்லு நீதிமன்ற உத்தரவின்படி செவ்வாயன்று வாக்குப் பதிவு நடைபெற்ற நிலை யில், 36 வாக்குகளில் காங்கி ரஸ் - ஆம் ஆத்மியின் 8  வாக்குகள் செல்லாது என அறிவித்து பாஜகவின் மனோஜ் சோங்கர் மேயராக வெற்றி பெற்றதாக தேர்தல்  நடத்தும் அதிகாரி அறி வித்தார்.

காங்கிரஸ், ஆம்  ஆத்மி கட்சிகளுக்கு மொத்  தம் 20 வாக்குகள் உள்ள  நிலையில், 8 வாக்குகள் செல்  லாது என அறிவிக்கப்பட்ட தால் 12 வாக்குகள் மட்டுமே  அக்கட்சிகளுக்கு கிடைத் தன. 8 வாக்குகள் செல்லாது என அறிவித்ததற்கு தேர்  தல் அதிகாரி எவ்வித விளக்க மும் அளிக்காத நிலையில், இதனை எதிர்த்து பஞ்சாப் -  ஹரியானா உயர்நீதிமன் றத்தை அணுகப் போவதாக  ஆம் ஆத்மி கட்சி அறிவித் துள்ளது.