பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் தலை நகராகவும், யூனியன் பிரதேசமாகவும் விளங்கும் சண்டிகர் நகரத்தின் மேயர், மூத்த துணை மேயர், துணை மேயர் பதவிகளுக்கான வாக் குப்பதிவு கடந்த ஜனவரி மாதம் 18-ஆம் தேதி நடை பெறுவதாக இருந்தது. 35 கவுன்சிலர்களைக் கொண்ட சண்டிகர் மாநக ராட்சியில், பாஜகவிற்கு 14 கவுன்சிலர்களும், ஆம் ஆத்மி கட்சிக்கு 13 கவுன்சிலர் களும், காங்கிரசுக்கு 7 கவுன்சிலர்களும், ஷிரோ மணி அகாலி தளத்துக்கு ஒரு கவுன்சிலரும், வாக்க ளிக்கும் உரிமையைக் கொண்ட பாஜக எம்பி-யான கிரோன் கெரும் வாக் களிக்கும் நபராக இருந்தார்.
காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி அமைப்பதாக அறி வித்த நிலையில், 20 வாக்கு களுடன் சண்டிகர் மாநக ராட்சியை “இந்தியா” கூட் டணி கைப்பற்றும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் வாக்களிக்கும் நேரத்தில் ஆம் ஆத்மி - காங் கிரஸ் கட்சிகளை மாநக ராட்சி அலுவலகத்திற்குள் விடாமல் பாஜகவின் கைப் பாவையாக இருந்த தேர்தல் நடத்தும் அதிகாரி போலீசார் மூலம் தடுத்தார்.
இதனால் ஆம் ஆத்மி - காங்கிரஸ் கட்சி கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர, பஞ்சாப் - ஹரி யானா உயர்நீதிமன்றம் ஜன வரி 30-ஆம் தேதி வாக்குப் பதிவு நடத்த உத்தரவிட்டது. பாஜக தில்லு முல்லு நீதிமன்ற உத்தரவின்படி செவ்வாயன்று வாக்குப் பதிவு நடைபெற்ற நிலை யில், 36 வாக்குகளில் காங்கி ரஸ் - ஆம் ஆத்மியின் 8 வாக்குகள் செல்லாது என அறிவித்து பாஜகவின் மனோஜ் சோங்கர் மேயராக வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறி வித்தார்.
காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு மொத் தம் 20 வாக்குகள் உள்ள நிலையில், 8 வாக்குகள் செல் லாது என அறிவிக்கப்பட்ட தால் 12 வாக்குகள் மட்டுமே அக்கட்சிகளுக்கு கிடைத் தன. 8 வாக்குகள் செல்லாது என அறிவித்ததற்கு தேர் தல் அதிகாரி எவ்வித விளக்க மும் அளிக்காத நிலையில், இதனை எதிர்த்து பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன் றத்தை அணுகப் போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித் துள்ளது.