india

img

பள்ளி மாணவர்களிடையே மோதல் - ஒருவர் சுட்டுக்கொலை

டெல்லியில் பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள துவாரா பகுதியில், திடீரென சாலையில் பள்ளி மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது ஒரு மாணவன் உதவிக்குத் தனது நண்பனை அழைத்து வந்துள்ளார். அவரும் எதிர்த்தரப்பு மாணவர்களுடன் சண்டையில் ஈடுபட்டுள்ளார். அப்போது மாணவர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து அந்த இளைஞரை நோக்கிச் சுட்டுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்நிலையில், இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இறந்தவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். காவல்துறையினரின் விசாரணையில், உயிரிழந்தவர் குர்ஷித் (19) என்றும், துப்பாக்கியால் சுட்ட மாணவர் மோனு (எ) சாஹில் என்பதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து காவல்துறையினர் மோனுவை கைது செய்து அவரிடம் இருந்த நாட்டு துப்பாக்கியைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, சண்டையில் ஈடுபட்ட இருதரப்பு மாணவர்களிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.