ஒன்றிய மோடி அரசு மாநி லத்தின் வரிப்பலன்களை பெற்றுக்கொண்டு தனது நிதித் தொகுப்பில் இருந்து உரிய பங்கினை ஒதுக்க மறுப்பதாக கர்நாடக அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில், புதனன்று மோடி அரசை கண் டித்தும், கர்நாடகாவுக்கு உரிய நிதி யை உடனடியாக ஒதுக்க வலி யுறுத்தியும் தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ் மூத்த தலைவரும் முதல்வருமான சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவ குமார், மாநில அமைச்சர்கள், கர் நாடகாவைச் சேர்ந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பி னர்கள் கலந்து கொண்டு முழக் கங்களை எழுப்பினர்.
போராட்டத்தின்போது செய்தி யாளர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமையா, “வரி வருவாயைப் பொறுத்தவரை நாட்டிலேயே மகா ராஷ்டிரா முதலிடத்தில் இருக்கி றது என்றால், கர்நாடகா இரண் டாம் இடத்தில் இருக்கிறது. இந்த ஆண்டு கர்நாடகா ரூ. 4.30 லட்சம் கோடியை வரியாக வழங்கி இருக்கிறது.
ஆனால் அதிக வரியை வழங்கும் கர்நாடகாவுக்கு முக்கி யத்துவம் அளிக்காமல் குறைவாக வரி வழங்கும் மாநிலத் துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படு கிறது. கர்நாடக அரசு வரியாக ரூ. 100 வசூலித்து ஒன்றிய அரசிடம் கொடுத்தால், ஒன்றிய அரசு மாநி லத்துக்கு ரூ.12-13 வரை மட்டுமே திருப்பி அளிக்கிறது. ஆனால் வட இந்திய மாநிலங்களுக்கு நிதியை வாரி வழங்கி வருகிறது ஒன்றிய அரசு. உதாரணமாக உத்தரப்பிர தேசத்துக்கு சுமார் ரூ.2.18 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலை யில், கர்நாடகாவுக்கு ரூ.44,485 கோடி மட்டுமே வழங்கியுள்ளது. கர்நாடகாவை எதிரி மாநிலமாக ஒன்றிய அரசு நினைக்கும் நிலை யில், மாநிலத்தின் பிற கோரிக்கை களையும் நிறைவேற்றுவது இல்லை. கர்நாடகாவின் மேல் பத்ரா திட்டத்துக்காக கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ. 5,300 கோடி ஒதுக் கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு அறி வித்த நிலையில், இதுவரை ஒரு ரூபாயைக் கூட விடுவிக்கவில்லை.
முக்கியமாக வறட்சி நிவாரண நிதி உள்ளிட்டவைகளும் வழங்கப்பட வில்லை. இந்த போராட்டத்தின் முக் கிய நோக்கமே, மாநில நலனை யும் கர்நாடக மக்களையும் பாது காப்பதே தவிர, பாஜகவுக்கு எதி ரான காங்கிரஸ் கட்சியின் போராட் டம் அல்ல. ஒன்றிய அரசு கர்நாடகா வுக்கு உரிய நியாயத்தை வழங்க வேண்டும். ஒருவேளை உரிய நிதி யை வழங்காவிட்டால், நாங்கள் கர்நாடக மக்களிடம் கண்டிப்பாக முறையிடுவோம்” எனத் தெரிவித் தார்.
முழக்கத்திற்கு கையை தூக்காத பாஜக எம்எல்ஏக்கள், எம்பிக்கள்
தில்லியில் நடைபெற்ற போராட்டத்தில் கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள், எம்பிக்களும் கலந்து கொண்டனர். ஆனால் ஒன்றிய மோடி அரசை கண்டித்து ஆளும் காங்கிரஸ் அமைச்சர் கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பினர். ஆனால் பாஜக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் முழக்கத்திற்கு கையை தூக்கா மல் குற்றம் செய்த குழந்தையை போன்று கம்முனு உட்கார்ந்து இருந்தார்கள்.